நான் அவரு வைஃப் மாதிரி பேசுனாரு; அவன் அத எதிர்பார்ப்பான் – கீர்த்தி சுரேஷ் பகீர்!

0
149

தனது வாழக்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்

கீர்த்தி சுரேஷ்

‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் ரஜினி முருகன், ரெமோ,தொடரி, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

நடிகை சாவித்ரியினுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமான ‘நடிகையர் திலகம்’ என்றுதிரைப்படமாக எடுத்தார்கள். அந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது இந்த படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து எல்லோரும் ரசிக்கும் அளவிற்கு கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ்.

கடைசியாக இவர் நடிப்பில் ‘சைரன்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் தனது வாழக்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை குறித்து கூறியுள்ளார்.

வைஃப் மாதிரி

அவர் கூறியதாவது “என்னை திருமணம் செஞ்சுக்க வேணும்னு கேட்டு அடிக்கடி ஒருத்தர் கிட்ட இருந்து கடிதம் வந்து கொண்டே இருந்துச்சு.அந்த லெட்டர் பேர், அட்ரஸ் அனைத்தும் போட்டே வரும். அவன் என்கிட்டே இருந்து பதில்களை எல்லாம் எதிர்பார்ப்பான்.

அதேபோல இன்னொருவர் வீடு தேடியே வந்தாரு. ஆனால், அவர் சற்று வேற மாதிரி இருந்தாரு. நான் அப்போ வீட்டிலில்லை. வீட்டில் பணி செய்றவங்க தான் இருந்தாங்க. இவர் நேரா அவங்களிடம் போய், ஏன் கீர்த்தி இந்த படம்லாம் பன்றா..? ஏன் அந்த படம்லாம் பன்றா..? அப்படின்னு கேட்டு இருக்காரு. ஏதோ நான் அவரு பொண்டாட்டி மாதிரியே பேசிட்டு இருந்துருக்காரு” என்று கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here