பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை விதிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், அத்துமீறல்கள் குறித்து “ஹேமா கமிட்டி” அமைக்கப்பட்டு முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம் பல மாநில சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுகிறது. தமிழ் சினிமாவில் இதே போன்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தமிழ் சினிமா அசோசியேசன்:
இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அவர் முகம் பொரிக்கப்பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது.
“விசாகா”
மலையாள சினிமா போன்று தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்திமீரிகள் குறித்து விசாரிக்க “விசாகா” கமிட்டி என்ற பெயரில் ஒரு கமிட்டி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. “விசாகா” கமிட்டிக்கு நடிகையும், பொதுவுடைமைவாதியுமான ரோகிணி அவர்கள் தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் நடிகைகள் விசாகா கமிட்டியில் பாலியல் புகாரளிக்க ஹெல்ப்லைன் மற்றும் இ-மெயில் முகவரி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நேரில் வர முடியாதவர்கள் இந்த ஹெல்ப்லைன் மற்றும் இ-மெயில் மூலம் பாலியல் புகார்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகள் தடை
பொதுக்குழு கூட்டத்தில், பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை என எச்சரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகை ரோகிணி டாக்:
பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை” என பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here