Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

அபிநய் இறப்பின் மூலம் அமைதியை கண்டுவிட்டார்.. வருத்தம் தெரிவித்த நடிகை விஜயலட்சுமி!

நடிகர் அபிநயின் மறைவு குறித்து நடிகை விஜயலட்சுமி வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னை 28 திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை விஜயலட்சுமி. அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து பல…

நடிகர் அபிநயின் மறைவு குறித்து நடிகை விஜயலட்சுமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை 28 திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை விஜயலட்சுமி. அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் நடிகர் முனிஷ்காந்த் நடிப்பில் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் “மிடில் கிளாஸ்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவர் தற்போது , துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் அபிநய் இறந்த செய்தி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது நேற்றைய முன் தினம் கல்லீரல் பிரச்சனையால் பாதிப்படைந்து போராடிக் கொண்டிருந்த நடிகர் அபிநய் காலமானார். ஆதரவு அற்ற நிலையில் இருந்த அவரது உடலை அவரது நண்பர்களும் திரை பிரபலங்களும் இணைந்து தகனம் செய்தனர். அவரது இந்த மறைவு அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அபிநயின் மறைவு குறித்து நடிகை விஜயலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில், சென்னை 28 படத்திற்குப் பிறகு, நான் அபிநய்யுடன் ஒரு ரேடியோ விளம்பரத்தில் நடித்தேன். அவர் அப்போது விளம்பர உலகில் நம்பர் ஒன். டெல்லியில் நடந்த அந்த படப்பிடிப்பின் போது, நாங்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்தோம். அப்போது நான் மிகவும் பயந்த சுபாவத்துடன் இருந்தேன். அப்போது அபிநய் தன்னிடம் நடந்து கொண்டதை வைத்து மிகவும் ஒழுக்கமுள்ள, நேர்மையான நபர் என்பதை உணர்ந்தேன். நாங்கள் இருந்த அந்த நான்கு நாட்களும் அவர் இரவு நேரங்களில் தனியாக மது அருந்தி சோகமாக அமர்ந்திருப்பார். ஒரு நாள், ‘ஏன் இப்படி குடிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் தன் வாழ்க்கை, தன் வலி, தன் அம்மா, அழுத்தங்கள் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தினார். நான் ஒன்றும் சொல்லாமல் முழுவதும் கேட்டுக் கொண்டேன்

Advertisements

அந்த உரையாடலுக்குப் பிறகு விமான நிலையத்தில் நாங்கள் விடைபெறும் போது, அவர் என்னிடம் ‘யாரும் எனது வலியை இவ்வளவு கவனமாக கேட்டதில்லை’ என்று சொன்னார். அதைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் சந்திக்கவில்லை. இன்று அவர் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது மனம் உடைந்தது. ஆனால் இது வருத்தத்திற்காக அல்ல. அவர் இறுதியாக அமைதியை கண்டடைந்தால். இம்முறை அவர் குடிப்பது தன் விடுதலையை கொண்டாடுவதற்காகத் தான் என்று உருக்கமாக பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

https://www.instagram.com/p/DQ5zYMMEm1T/?utm_source=ig_web_copy_link

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here