முடிவுக்கு வரும் விஜய் டிவி, சன் டிவி சீரியல்களால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். காரணம், தங்கள் விருப்பமான நடிகைகளை இனி பார்க்க முடியாதே என்பதுதான்.
தற்போது அண்ணி, தங்கை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது ரசிகர்கள் பட்டாலம் வந்துவிட்டது.
என்னதான் சின்னத்திரை ரசிகர்களை குளிர வைக்க ஏகப்பட்ட சீரியல்கள் வந்தாலும் தொடர்ந்து சீரியலை பார்த்துட்டு வருபவர்களுக்கு திடீரென்று அந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது என்று தெரிந்ததும் கவலைப்படுவது வழக்கம்தான். ஏனென்றால் அந்த நாடகம் நல்லா இருக்கோ இல்லையோ சீரியலில் நடிக்கும் நடிகைகளை பார்ப்பதற்காகவே தனி கூட்டம் உண்டு.
ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும் இந்த சீரியலையே சீரியல் பார்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு சேலைகள் நகைகளை பார்ப்பதற்காகவே பெண்கள் சீதைகளை தொடர்ந்து பார்க்கின்றனர் தற்போது சினிமா நடிகை வீடு சீரியல் நடிகைகளுக்கு மவுஸ் அதிகம் தான்.
அப்படி சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டி போட்டு ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதில் சன் டிவி மொத்தம் காலை மற்றும் மாலை என 18 சீரியல்களை கொண்டு வருகிறது.
சன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் மக்களை கவர்ந்த ஒரு சீரியல் இனியா. இதில் விக்ரமின் நடிப்பையும் இவரின் சிரிப்பையும் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் கடந்த வருடம் இந்த சீரியலுக்கு கிடைத்த ஆதரவு போல் தற்போது இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கி வருவதால் இதை முடித்து விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.
அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில் இனியா சீரியல் முடியப்போகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வருகின்ற “முத்தழகு” சீரியல் தற்போது முடிய போகிறது.
அதற்கும் காரணம் அடுத்த மாதத்தில் இருந்து “பிக் பாஸ்” வருவதால் சீரியல் நேரத்தில் மாற்றம் ஏற்பட போகிறது. அதனால் இடைஞ்சலாக இருக்கும் முத்தழகு சீரியலுக்கு முடிவு கட்ட நேரத்தை ஒதுக்கி விட்டார்கள். இந்த இரண்டு சீரியல்களைத் தொடர்ந்து விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலும் சன் டிவியில் சுந்தரி சீரியலும் சீக்கிரத்தில் முடியப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here