சென்னை மாநகராட்சியில் மீண்டும் வரி உயர்வு – மேயர் பிரியாவின் புது விளக்கம்…!

0
106

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு ஏன் என்பதற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா புது விளக்கத்தை அளித்துள்ளார்.

“கேரளா, ஆந்திரா, வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி குறைவாகத்தான் வசூலிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டியளித்துள்ளது, அரசியலாகி உள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கொளத்தூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், துறைமுகம் மற்றும் எழும்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பகுதிகள் மற்றும் வார்டுகள் வாரியாக பொதுமக்கள் தேவைகளைக் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கும் திட்டத்தை சென்னை அயனாவரத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அயனாவரம் மற்றும் மேயர் பிரியா வார்டுக்கு சென்று அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா அவர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்து கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும் மக்களிடம் உறுதி அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வரி போடப்படாமல் இருந்தது கடந்த 2022 ஆம் ஆண்டு தான் சொத்து வரியை குறைவாக உயர்த்தினோம்.

கேரளா, ஆந்திரா வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி குறைவாகத்தான் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படக் கூடிய தேவைகள் அதிகமாக உள்ளது.

ஒன்றிய அரசு கொடுக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி தான் அரசு சார்பில் மிகக்குறைவாக வரி வசூலிக்கப்படுகிறது.

சாலைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டு வருகிறது.

நவம்பர் டிசம்பர் மாதம் பெய்யும் மழையால் சாலைகள் குண்டும் குழியமாக மாறிவிடுகிறது, மாநகராட்சி சார்பில் ஐந்தாயிரம் பகுதிகள் கண்டறியப்பட்டு 3 பகுதிகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது, பேட்ச் ஒர்க் செய்ய சூழல் இல்லாத சாலைகளில் புதிதாகவே சாலை போட்டு வருகிறோம் தற்போது தான் மழை முடிந்திருக்கிறது இந்த மாதம் முதல் சாலைகள் போடப்படும் என்று கூறினார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here