Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

வீட்டிலிருந்து வெளியே வந்த த.வெக தலைவர் விஜய் : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்ததன் பின்னணி என்ன?…

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை ஈசிஆர் பகுதியில்…

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

Advertisements

சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வேலு நாச்சியார் நினைவு தினம், பேரறிஞர் அண்ணன் நினைவு தினம் போன்ற தலைவர்களின் நினைவு தினம், மற்றும் பிறந்த தினம் அன்று த.வெ.க தலைவர் விஜய் அவர்கள் தனது வீட்டிலேயே  தலைவர்களின் புகைப்படத்தை வைத்து அதற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அத்துடன் நிகழ்ச்சியை முடித்து விடுவார். ஆனால் அவர் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here