மனைவி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் : யார் அந்த 3வது நபர்?

0
250

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். 

நீதிமன்றத்திலும் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.   இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, “இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர வேண்டும் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார். விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி ஒருவருடன் நடிகர் ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதால் தான், மனைவி ஆர்த்தி அவரை விவகாரத்து வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here