ஜாய் கிரிசல்டா வெளியிட்ட வீடியோவை பிரபல அரசியல் விமர்சகர் கலாய்த்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
இணையதளம் முழுவதும் மாதம் பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்டா ஆகியோரின் இரண்டாவது திருமணம் குறித்த விவகாரம் தான் தீயாக பரவி வருகிறது. ரங்கராஜன் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசல்டா கூற பணத்திற்காக பிளாக்மெயில் செய்துதான் என் மீது குற்றம் சுமத்துகிறார் என்று ரங்கராஜன் கூற இருவரின் விவாதமும் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜாய் கிரிசல்டா வெளியிட்டு இருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த வீடியோவில் ரங்கராஜ் என் பொண்டாட்டி தான் மிகவும் அழகு என்றும் அவரை ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும் காதல் தழும்பக் லவ் யூ, மிஸ் யூ எனக்கூறி முத்தம் மழையை பொழிந்துள்ளார். இந்த வீடியோவை பதிவிட்ட ஜாய் கிரிசல்டா அதில் இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா என்றும் மிஸ்டர் ஹஸ்பண்ட் மாதம்பட்டி ரங்கராஜ் எனக் குறிப்பிட்டு மக்களிடம் நீங்களே சொல்லுங்க இதில் லவ்ல பேசுறாரா? இல்ல மிரட்டலின் பெயரில் பேசுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது இந்த பதிவிற்கு பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே.சுவாமி அவர்கள் கலாய்க்கும் வகையில் பதிவிட்டிருக்கும் பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
அதில் அவர்,”நம்ம லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் தலைமையில் ஜாய், மாதம்பட்டி, ஸ்ருதி பஞ்சாயத்து வைச்சா செம்மையா போகும். நடுவுல பீட்ரூட் அல்வா செய்வது எப்படி என்று குக் வித் காவாலின்னு ஷோவும் பண்ணலாம்” என்று நகைச்சுவையாக கமெண்ட் போட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


