சென்னை: வடிவுடை அம்மன் கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். அப்போது ஆதிபுரீஸ்வரரை வெள்ளிக் கவசமின்றி தரிசனம் செய்தார். இவருடன் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் மற்றும் மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு உடனிருந்தனர்
தொண்டை மண்டல என்று சொல்லப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் சிவதலங்கள் 32 திருத்தலங்கள் அமைந்துள்ளன.
அவற்றில் ஒன்றான பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் படம்பக்கநாதர் ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். பிரளய காலத்திற்கு பின்பு ஏற்பட்ட முதல் சுயம்பு லிங்கம் என்பதால் இந்த கோயிலுக்கு ஆதிபுரீஸ்வரர் என பெயரிடப்பட்டது.
வாசுகி பாம்பு
வாசுகி என்ற பாம்புக்கு அருள்புரிய வேண்டி புற்று வடிவில் எழுந்தருளி, வாசுகி பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால். படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். புற்று மண்ணால் சுயம்பு லிங்கமாக உருவானதால் அரவது திருமேனி ஆண்டு முழுவதும் வெள்ளிக்கவசத்தால் மூடப்பட்ட நிலையில்தான் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
கார்த்திகை மாதம் பவுர்ணமி
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பவுர்ணமியை ஒட்டி மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம் மூன்று நாள்களுக்கு மட்டும் திறந்து வைக்கப்படும். இந்த ஆண்டும் கார்த்திகை பவுர்ணமியையொட்டி சனிக்கிழமை நேற்று மாலை 6 மணிக்கு கவசம் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
கவசம் திறப்பு
கோயில் உதவி ஆணையர் நற்செயனை தலைமையில் நடைபெற்ற கவசம் திறப்பு நிகழ்ச்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று ஆதிபுரீஸ்வரர் தரிசனம் செய்தனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here