என்னால் முடிந்ததை உதவி கேட்பவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என நடிகர் பாலா தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தில் அமைத்துள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டார். இந்த விழாவில் நடனமாடி, மேடையில் பேசிய அவர் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து “ராகவா லாரன்சின் ‘மாற்றம்’ அமைப்பில் நானும் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா தெரிவித்தார். இனி வரும் காலங்களில் ‘மாற்றம்’ அமைப்பில் என்னுடைய பங்களிப்பும் நிறைய இருக்கும்.
நான் கேட்டபோது எனக்கு யாரும் உதவவில்லை. என்னிடம் உதவி கேட்பவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. இப்போது மட்டுமில்லாமல், வாழ்க்கை முழுவதும் உதவிகளை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று கூறினார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here