விஜய் டிவியில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிரபல ஹீரோயினாக வலம் வந்த நேரத்தில் திடீரென கலர்ஸ் தமிழ் டிவிக்கு மாறியது குறித்த காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நுழைந்தவர் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி. முதல் சீரியல் தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர். இதைத் தொடர்ந்து விஜய் டிவியின் பிரபல சரவணன் மீனாட்சி தொடரில் நடிகையானார். ஒரு பக்கம் நடிகர்கள் மாறிக்கொண்டிருந்தாலும் அந்த சீரியலின் பல சீசன்களில் நடித்திருந்தார் ரச்சிதா.
தொடர்ச்சியாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டார். அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இவரை பார்த்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உருக, அதுவே நிகழ்ச்சிக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இறுதி வரை சென்று வெளியேறினார். அதில் பங்கேற்று கொண்ட திருநங்கை சிவின் கணேசனுடன் இவருடைய நட்பு பாராட்டுகளை வாங்கியது.

பல பிரபலங்கள் பிக் பாஸ் இருந்து வெளியேறிய உடன் விஜய் டிவியில் ஏதாவது ஒரு வகையில் சேர்ந்து இருப்பார்கள். ஆனால் ரச்சிதா தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் ஒரு சீரியல் நடித்து வருகிறார். இது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி பேசிய ரச்சிதா, உங்களை வளர்த்து விட்ட தொலைக்காட்சியை கை விட்டு வேறு தொலைக்காட்சிக்கு போக வேண்டாம் எனக் கூறுகின்றனர்.
மேனேஜர் ஒருவர் நீங்கள் வேறு தொலைக்காட்சிக்கு போனால் உங்கள் பெயர் கெட்டுப்போகும் என்கிறார். பெயர் கெட்டுப்போகும் அளவுக்கு நான் அங்கு சென்று என்ன பண்ணப்போகிறேன். பெரிய அளவில் சம்பளம் கிடைத்தால் வரவேற்பு கூடுதலாகும் என்பதால் இன்னொரு சீரியலை ஒப்புக்கொண்டு அங்கே சென்றுள்ளேன். பிரபல தொலைக்காட்சிகளில் நடித்தால் சின்ன தொலைக்காட்சிகளை யார் வளர்த்து விடுவார் எனவும் கூறியுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here