ஆர்.எம். வீரப்பன் ஒருபோதும் பணத்திற்குப் பின்னால் சென்றவர் இல்லை – ரஜினிகாந்த்

0
287
Rajinikanth talk about RM Veerappan
Rajinikanth talk about RM Veerappan

Rajinikanth talk about RM Veerappan : ஆர்.எம். வீரப்பன் ஒருபோதும் பணத்திற்குப் பின்னால் சென்றது கிடையாது. அண்ணா கூறிய கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வாழ்ந்தவர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

Rajinikanth talk about RM Veerappan
Rajinikanth talk about RM Veerappan

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் நேற்று காலமானார்.

இதையும் படிங்க : தலைவர் 171 படத்தில் இந்த பிரபல 80 பது களின் ஹீரோவும் இருக்கிறாரா?

அவருக்கு வயது 98 ஆகும். தி. நகர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

”ஆர்.எம். வீரப்பன் ஒருபோதும் பணத்திற்குப் பின்னால் சென்றவர் கிடையாது. அண்ணா கூறிய கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தவர். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு ஆழமானது. உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் நம்மை விட்டு சென்றுள்ளார்.

எம்.ஜி.ஆருடைய அரசியல் வாழ்க்கையிலும், திரைப்பட வாழ்க்கையிலும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர். அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள், மத்திய மாநில அமைச்சர்களாகி பெரிய புகழுடன் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் . நான் என் வாழ்வில் அவரை மறக்கவே முடியாது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here