திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற பருத்திவீரன் சுஜாதா, தற்போது சன் டிவியின் புதிய ரியாலிட்டி ஷோவான ‘டாப் குக் டூப் குக் ‘ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் வென்று டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார்.
ஆரம்பத்தில் ஓரிரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டிருந்த பருத்திவீரன் சுஜாதா முதல் முறையாக பங்குபெற்ற முழுநீள பெரிய ரியாலிட்டி ஷோ இதுதான். அதில் நடக்கும் சமையல் போட்டியில் ஆரம்பத்தில் இவர் எளிதாக வைத்த பூசணிக்காய் சாம்பாருக்காக விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் இப்போது அவரே டைட்டில் வின்னராகி இருப்பதுதான் ஆச்சரியம்.
அவரிடம் பேசியபோது :
நான் மதுரையில் இருந்து கொண்டு தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் அழைக்கும் போது, சென்னை வந்தோ அல்லது பிற ஊர்களுக்குச் சென்றோ நடித்துக் கொடுத்து வருகிறேன். மற்றபடி என் குடும்பம் மதுரையில் தான் இருக்கிறது. இந்நிலையில் பலரும் என்னை டிவி ரியாலிட்டி ஷோவுக்கு அழைத்தார்கள்.

ஆனால், தேதிகள் சரியாக அமையாது. அதனால் நடிக்கும் படங்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தவிர்த்து வந்தேன் . அதனால் இப்படிப்பட்ட டிவி ஷோக்களில் பங்கெடுப்பதில் நிறைய தவிர்த்தது உண்டு. அப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் குக்வித் கோமாளி ஷோ தயாரித்த மீடியா மேசன்ஸ் குழுவினர் என்னை பலமுறை அழைத்தார்கள். முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது உண்மைதான். பிறகு நிகழ்ச்சிக்குள் போகப் போக ஈடுபாடு வந்து விட்டது. இதோ டைட்டில் வின்னர் வரை வந்திருக்கிறது என்றார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here