உலக சாதனை புத்தகத்தில் மூன்றாவது முறையாக இடம் பிடித்திருக்கும் KPY புகழின் மகள் ரிதன்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிக்கின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் புகழ். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் தனது ஒட்டுமொத்த நகைச்சுவை திறமையும் வெளிப்படுத்தி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த புகழ் தற்போது வெள்ளி திரையிலும் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் புகழின் மகள் ரிதன்யா புகழேந்தி, தனது மூன்றாவது உலக சாதனையை படைத்து சாதனையாளர்களின் பட்டியலில் இணைந்திருப்பது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதாவது புகழ் பென்சி தம்பதியினருக்கு ரிதன்யா என்னும் ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தை தனது 1 வயது 1 மாதத்தில் (Toddler) 2 கிலோ எடை கொண்ட டம்பல்ஸை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு 10 மீட்டர் தூரம் நடந்து முடித்து, ‘International Book of Record’ சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இது குறித்து நடிகர் புகழ் தனது சமூக வலைதள பக்கத்தில் “எங்களுடைய மகள் மூன்றாவது International Book of Record சாதனையை முடித்துவிட்டார்” என்று பெருமிதத்துடன் பகிர்ந்திருக்கும் பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வாழ்த்துக்களை குவித்து வைரலாகி வருகிறது.
புகழின் மகள் ரிதன்யா பிறந்த சில மாதங்களிலேயே தனது முதல் சாதனையாக அதிகமான நேரம் டம்பல்ஸை கையில் தூக்கி வைத்துக்கொண்டு நின்ற சாதனையை செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாடி படியில் வேகமாக ஏறி தனது இரண்டாவது சாதனையை படைத்து, வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உட்பட பல புத்தகங்களில் இடம்பிடித்தார். தற்போது இரண்டு கிலோ இடையுள்ள டம்பில்சை தூக்கிக்கொண்டு 10 மீட்டர் நடந்து தனது மூன்றாவது சாதனையை படைத்து இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ரிதன்யாவின் இந்த சாதனையை பாராட்டி ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/DQ6EA6mgQAX/?utm_source=ig_web_button_share_sheet&igsh=ZDNlZDc0MzIxNw==
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


