இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை நடிகர் வடிவேலுவை வைத்து எடுத்ததன் மூலம் சிம்புதேவன். இயக்குனராக அறிமுகமானவர். இந்த படம் வடிவேலுவிற்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை போல விஜய்யை வைத்து புலி என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார் சிம்புதேவன்.
ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. தற்போது சிம்புதேவன் நடிகர் யோகி பாபுவை வைத்து போட் என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

புலி படம்
போட் பட புரொமோஷன் நிகழ்ச்சியின் போது பேட்டி ஒன்றில் சிம்புதேவன் பேசும்போது, புலி படத்தில் தேவையான அனைத்து விஷயங்களையும் முறையாகவே செய்தேன், ஆனால் அந்த நேரத்தில் ரெய்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் படம் ரிலீசானதும் கடும் விமர்சனங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
இம்சை அரசன் படத்தைப்போல அனைவருக்குமான படமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்ப்பார்த்ததாகவும் ஆனால் படம் எதிர்ப்பார்த்தது போல ரசிகர்களை கவர தவறிவிட்டதாக சிம்புதேவன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here