Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

டிடிஎஃப் வாசனுக்கு கெட் அட்-டு : கூல் சுரேஷ்க்கு கட்ட அவுட்-டா? :  மீண்டும் மஞ்சள் வீரன்

பில்டப் இயக்குநர் செல்அம் “மஞ்சள் வீரன்” படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனுக்கு பதிலான நடிகர் கூல் சுரேஷ் கதை நாயகனாக நடிப்பார் என்றும், விரைவில் படப்படிப்பு தொடங்கப்படும்…

பில்டப் இயக்குநர் செல்அம் “மஞ்சள் வீரன்” படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனுக்கு பதிலான நடிகர் கூல் சுரேஷ் கதை நாயகனாக நடிப்பார் என்றும், விரைவில் படப்படிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்து விட்டார்.

திரு.வி.க பூங்கா என்னும் சுமாரான படத்தை இயக்கிவர் இயக்குநர் செல்அம். இந்தப் படத்தை அவரே தயாரித்து, கதை நாயகனாவும் நடித்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற “நாளை எல்லாம் நலம் தானே” பாடல் பிரபலமானது. இருப்பினும் படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லாததால் படம் வெளிவந்தது கூட யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் இயக்குநர் செல்அம் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 2வது படத்தை உருவாக்கப் போவதாக தெரிவித்தார். அதற்கு “மஞ்சள் வீரன்” என்று உருவாகும் படத்திற்கு சர்ச்சை ஜெயில் யூடிப்பர் “டிடிஎஃப் வாசன்” தான் ஹீரோ என்று அறிவித்தார். 

Advertisements

சர்ச்சையும், பிரச்னையும் அன்று ஆரம்பித்தது இன்று வரை ஓயவில்லை. இதற்கிடையில் டிடிஎஃப் வாசன் ஜெயிலுக்கு எல்லாம் சென்றுவிட்டார். பின்பு இயக்குநர் செல்அம் அவர்களுக்கும், டிடிஎஃப் வாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தால் டிடிஎப் வாசன் நீக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் செல் அம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிஎப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது, இந்தப் படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டதாகவும், இதில் கூல் சுரேஷ் நடிப்பது உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here