சுசித்ரா – கார்த்திக்கிற்கு இடையில் என்ன நடந்தது? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

0
155

What happened between Suchitra and Karthik : சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாக உள்ள சுசித்திராவின் வாழ்க்கையில் உண்மையில் என்ன நடந்தது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

வானொலியில் ஆர்ஜே, பின்னணி பாடகி மற்றும் பத்திரிகையாளர் என பல முக தன்மை கொண்டவராக சுசித்ரா பார்க்கப்படுகிறார்.

What happened between Suchitra and Karthik

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். பின்னர் கார்த்திக் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

இப்படியாக சுசித்திராவின் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பிரபலங்களின் தேவையற்ற போட்டோக்கள் வெளியாகின.

அன்றிலிருந்து இன்று வரை சமூக வலைத்தளங்களில் சுசித்திராவின் கருத்துக்கள் சர்ச்சை பேச்சாக மாறியுள்ளது.

இது தொடர்பாக கார்த்திக் விளக்கம் தந்த போது சுசித்திரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

பிரச்சினை ஆரம்பித்து சுமாராக 8 ஆண்டுகளாக சுசித்திரா என்ன செய்து கொண்டிருந்தார்? எங்கிருந்தார்? என்ற தகவல் முழுமையாக வெளியாகவில்லை.

மாறாக சுசித்திரா முதல் கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்து விட்டு தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சமிபத்தில் பிரபல யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டியில் இவர் கூறிய விடயங்கள் மீண்டும் பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதனை தொடர்ந்து, தற்போது ராஜா என்ற வழக்கறிஞரை மறுமணம் செய்து கொண்டு அவருடைய 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ராஜா போல ஒருவர் தான் தேடிச் சென்றாலும் கிடைக்கமாட்டார் என்பதனையும் அவர் தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here