Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி விடுவேன்! இப்போவே நாள் குறித்த துஷாரா.. இது தான் காரணமாம்!

Dushara Vijayan Quits Cinema : நடிகை துஷாரா விஜயன் ராயன் பட விழாவின் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சினிமாவை விட்டு விலகுவது பற்றி…

Dushara Vijayan Quits Cinema : நடிகை துஷாரா விஜயன் ராயன் பட விழாவின் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சினிமாவை விட்டு விலகுவது பற்றி பேசி அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார்.

Dushara Vijayan Quits Cinema

தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இளம் நடிகையாக இருப்பவர் துஷாரா விஜயன். பிற மாநிலங்களில் இருந்து கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு இடையில், தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் துஷாரா.

சிறு வயது முதல் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை மனதில் இருந்ததால், சென்னைக்கு வந்து படம் நடிக்க வேண்டுமென்று தீவிர ஈடுபட்டார். தொடக்கத்தில் இவரை பார்த்து பலர், நீ எல்லாம் ஹீரோயின் அந்தஸ்தில் இல்லை என கூறிய நிலையில், மனம் தளர்ந்து போகாமல் பட வாய்ப்பு தேட துவங்கினார்.

இதன் பலனாக கடந்த 2019 ஆம் வருடம் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இப்படமானது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யாவுக்கு இணையாக நடித்த ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் அதிக அளவில் பேசப்பட்டது.

இப்படத்திற்கு பின்னர் ரசிகர்களால் பார்க்கப்படும் நடிகையாக மாறினார் துஷாரா, காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக ‘நட்சத்திரம் நகர்கிறது’, அருள்நிதி ஜோடியாக ‘கழுவேத்தி மூர்க்கன்’ மற்றும் அர்ஜுன் தாஸ் ஜோடியாக ‘அநீதி’ போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றியாகவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் வெற்றி பெற்றது.

Advertisements

அதே போல் துஷாரா விஜயனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது துஷாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ‘வேட்டையன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் தனுஷின் சகோதரியாக ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரமுக்கு நாயகியாக ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார். எனவே இந்த வருடம் இவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தனுஷின் ராயன் பட விழாவில் பங்கேற்ற துஷாரா, இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பு அவர் வேலை வாங்கிய முறை பற்றி புகழ்ந்து தள்ளினார். அதே போல் தன்னுடன் நடித்த சக நடிகர்கள் குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா, சினிமாவில் தன்னுடைய ஓய்வு எப்போது என பேசி அதிர்ச்சி கொடுத்தார். தனக்கு 35 வது வயது ஆன பிறகு முழுமையாக திரையுலகில் இருந்து விலகிடுவேன் என துஷாரா தெரிவித்துள்ளார். 35 வயதுக்கு பிறகு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் தனது கனவு என்பது போல் துஷாரா சொன்னது குறிப்பிடத்தக்கது தற்போது துஷாராவுக்கு 26 வயது ஆகும் நிலையில், இன்னும் 9 ஆண்டுகள் மட்டுமே நடிப்பார் என்பது தெரிகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here