நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் : அதிர்ச்சியில் மல்லுவுட்

0
121

அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, உறுதியாகி உள்ளது.  

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து எழுந்துள்ளன. சில முன்னணி நடிகர்கள் மீது காவல்துறை என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகியநிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பாலியல் குற்றச்சாட்டு சிக்கி உள்ளது வெறும் அதிர்ச்சி அளிக்கிறது மலையாள சினிமா வைப் போன்று தமிழ் சினிமாவில் பாலியல் புகார் அதிகரித்து வருவதாகவும் இது குறித்து தமிழக அரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என தமிழ் சினிமா நடிகைகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கு நிவின் பாலி அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு பெண் தன்னால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறுவது முற்றிலும் பொய். இதை நிரூபிக்க நான் போராடுவேன் என்றும் அவர் உறுதிப்பட கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here