Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

வேள்வி கேட்ட பெண்ணை அறையில் போட்டு அடைத்த த.வெ.க நிர்வாகிகள் : செய்தியாளர்களை விரட்டி அராஜகம்

சொத்தை விற்று விஜய் இயக்கத்தை வளர்த்த என் அண்ணனை ஒதுக்கியது ஏன் என புஸ்ஸி ஆனந்திடம் கேட்ட பெண்ணால் கும்பகோணம் த.வெ.க. ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.…

சொத்தை விற்று விஜய் இயக்கத்தை வளர்த்த என் அண்ணனை ஒதுக்கியது ஏன் என புஸ்ஸி ஆனந்திடம் கேட்ட பெண்ணால் கும்பகோணம் த.வெ.க. ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தி.வெ.க

நீண்ட காலமாக மறைமுகமாக அரசியலுக்கு அடித்தளத்தை போட்டு வந்த நடிகர் விஜய் அவர்கள் இந்த ஆண்டு புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதற்கு “தமிழக வெற்றிக் கழகம்” என்று பெயரிட்டுள்ளார். கட்சிக்கென தனித்துவமான கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றினார். தனது ரசிகர் மன்றத்தில் உள்ள நிர்வாகிகளை கட்சியின் பக்கம் இழுத்து கட்சி நிர்வாகிகளாக மாற்றினார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கைவிட்டு அறிவித்து இருந்தார்.

இருப்பினும், த.வெ.க கட்சியில் போதிய அளவில் பெண்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண் நிர்வாகிகள் மாவட்டம்தோறும் இன்னும் நியமிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Advertisements

இந்நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பெண் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமை தாங்கிய பேசிக்கொண்டிருந்தபோது, மேடை அருகே வந்த ஒரு பெண், விஜய் மக்கள் இயக்கத்திற்காக சொத்தை விற்று உழைத்த தன் அண்ணனை ஒதுக்கி வைத்தது ஏன்? என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.


இந்த சலசலப்புக்குப் பின், அவ்விடம் சென்ற பவுன்சர்கள், அப்பெண்மணியைப் பேசவிடாமல் தடுத்து ஒரு கண்ணாடி அறைக்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்தனர். மேலும் செய்தியும் சேகரிக்கவிடாமல் பத்திரிகையாளர்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தடுத்து விரட்டியதாக கூறப்படுகிறது.

இப்போவே, இப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். நாளை வெற்றி பெற்றால் என்னென்ன செய்வார்களோ! பெண்களின் நிலை என்னவாகுமோ? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here