திரைப்பட நடிகரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான இ.வி.கணேஷ் பாபு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
“திருமதி செல்வம்” என்னும் சன் டிவி சீரியல் மூலம் மக்களுக்கு அறிமுகமானவனர் கணேஷ் பாபு.
தொடக்கம்:-
ஆரம்பகாலத்தில் பத்திரிகையாளராக இருந்தவர். பிறகு, நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் இ.வி.கணேஷ்பாபு. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே “யமுனா” என்ற திரைப்படத்தை இவரே எழுதி இயக்கினார். இந்தப் படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்ததுடன், “கட்டில்” படத்தை தயாரித்து இயக்கவும் செய்தார்.
தேசிய விருது:-
இவர் இயக்கிய “ஆசான்” குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டது. அதே போல, இவர் இயக்கிய “கருவறை” என்ற குறும்படத்துக்கு இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது கிடைத்தது.
விழிப்புணர்வு குறும்படங்கள்:-
மாநில அரசு சார்பாக கொரோனா விழிப்புணர்வு திரைப்படங்களும் மக்களை ஈர்த்தன. தற்போது தமிழக அரசு சார்பாக, ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு பாடலை எழுதி இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக இ.வி.கணேஷ்பாபு நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தமிழ் திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here