Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

என்னிடம் சரக்கு தீர்ந்துவிட்டதா? : நடிகர் விஜய் சேதுபதி கவலை

"நான் தொடர்ந்து படங்களில் நடிப்பதால், என்னிடம் சரக்கு தீர்ந்துவிட்டது, இது சரிவராது என்று சிலர் சொல்கிறார்கள்" என்று நடிகர் விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற…

“நான் தொடர்ந்து படங்களில் நடிப்பதால், என்னிடம் சரக்கு தீர்ந்துவிட்டது, இது சரிவராது என்று சிலர் சொல்கிறார்கள்” என்று நடிகர் விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:  “நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவை தாண்டி சீன ரசிகர்களை யும் இந்த அளவுக்கு கவரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த படத்துக்கு ரசிகர்களாகிய நீங் கள் கொடுத்த மிகப்பெரிய அன்புக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன்” என்று கூறினார்.

இப்படி ஒரு கதையை எழுதி, அந்த கதாபாத்திரங்களை நடிகர்களுக்குள் புகுத்தி தான் விரும்பிய படி படத்தை இயக்கிய நித்திலனுக்கு எப்போதுமே நன்றி கடன் பட்டுள்ளேன். நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில், விஜய் சேதுபதி அவ்வளவு தான் அவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். ஆனால், மகாராஜா விஜய் சேதுபதி என ‘மகாராஜா’ படம் என்னை மீண்டும் தூக்கி நிறுத்தியதும் சினிமாவுக்கு உண்மையாக இருக்கும் கலைஞனை சினிமா பாதுகாக்கும் என்பதை புரிந்துக் கொண்டேன். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

Advertisements

விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here