Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அப்பா வயது இயக்குநர் : தப்பா? சரியா? நடிகை அஸ்வினி ஓபன் டாக்

அப்பா வயதுள்ள இயக்குனர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதால் நான் சினிமாவை விட்டு பல ஆண்டுகளாக விலகி இருந்ததாக நடிகை அஸ்வினி பரபரப்பு…

அப்பா வயதுள்ள இயக்குனர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதால் நான் சினிமாவை விட்டு பல ஆண்டுகளாக விலகி இருந்ததாக நடிகை அஸ்வினி பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை அளித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்கிய “புது நெல்லு புது நாத்து, கிழக்குச் சீமையிலே” ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அஸ்வினி.

அதனைத் தொடர்ந்து அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு அவர் ஒதுங்கியே இருந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் பெரும் தொழில் அதிபராகும். இவரும் கணவருடன் சிறிது காலம் வெளிநாட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. அதுபோல சினிமா துறையிலும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை, பாலியல் தொல்லை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

இது குறித்து நடிகை அஸ்வினி சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அவர் பேட்டியில் கூறிய பரபரப்பு குற்றச்சாட்டி குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் அறிமுகம் :

அதில் நான் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் பிரபலமானேன். அதற்குப் பிறகு கிழக்கு சீமையிலே போன்ற ஹிட்டான திரைப்படங்களும் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் எனக்கு சில கசப்பான சம்பவங்களும் நடைபெற்றது. சூட்டிங்கிற்கு எப்போதும் என்னுடைய அம்மாவோடு தான் வருவேன்.

பாலியல் தொல்லை :

Advertisements

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அம்மாவால் ஷூட்டிங்கிற்கு வர முடியாமல் இருந்தது. அதனால் நான் என்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட் உடன் வந்து இருந்தேன். அப்போது நான் தனியாக இருக்கும்போது அந்த திரைப்படத்தின் டைரக்டர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனக்கு அதை வெளியே சொல்லுவதற்கே பயமாக இருந்தது. நானும் டீன் ஏஜ் பருவத்தில் இருந்ததால் இதில் எது தவறு எது சரி என்று எனக்கு யோசிக்க முடியவில்லை.

மன குழப்பம்

அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது மட்டும்தான் என்னுடைய மண்டையில் ஓடிக்கொண்டு இருந்தது. ஒருவேளை நான் செய்ததுதான் தவறா? நான் இங்கே தனியா வந்திருக்கக் கூடாதா? இந்த டைரக்டர் என்னிடம் தப்பாக நடந்து கொள்ளும்போது நாம் அதற்கு எப்படி மறுப்பு சொல்லி இருக்க வேண்டும்? என்றெல்லாம் யோசித்து யோசித்து எனக்கு ரொம்பவும் மனக்கஷ்டமாகிவிட்டது.

தற்கொலை முயற்சி :

இதைப்பற்றி என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொல்லவில்லை. நான் தூக்க மாத்திரைகளை நிறைய சாப்பிட்டு தற்கொலை முயற்சி எடுத்தேன். அதற்கு பிறகு தான் என்னுடைய அம்மா என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது நடந்த விஷயத்தை சொன்னேன். அதில் உன்னுடைய தவறு எதுவும் இல்லை என்று என்னுடைய அம்மா எனக்கு புரிய வைத்தார். அதற்குப் பிறகு நான் சினிமாவில் நடிப்பதை குறைத்து இருந்தேன்.

தற்போது ஓ.டி.டி-யில் வெளியாகி உள்ள “சுழல்-2” படத்தின் மூலமா தமிழ் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை அஸ்வினி சரியான வாய்ப்புகள் தந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் இல்லையென்றால் கணவருடன் வெளிநாட்டிற்கு செல்வதாகவும் பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகை அஸ்வினியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட அப்பா வயது உடைய இயக்குனர் யார்? என்பது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் விவாதிக்கிறார்களாம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here