தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன்-8 ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. ஆனால் மத்த சீசன்கள போல, இந்த சீசன் இல்லையே என்று ரசிகர்கள் குறை கூறி வருகின்றார்கள்.
என்றென்றால், முக்கிய போட்டியாளர்கள் யாரும் பங்கேற்காததால் இந்த சீசன் மந்தமாக செல்வதாக சொல்லப்படுகிறது.இருப்பினும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்கிறார் என்று ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள்தான் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்துடன் தனது வழக்கமான பாணியை வெளியே ஆரம்பித்துவிட்டார் அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் என்னென்ன நடக்கிறது என்று வெளிப்படையாக பேசி வருகிறார் ஒவ்வொன்றையும் புட்டு, புட்டு வைத்து வருகிறார்.
அவர் தனியாக ஒரு யூடிப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு எத்தனை கட்ட பரிசோதனை நடக்கிறது என்று. உள்ளே நூறு நாட்கள் ஒரு போட்டியாளராக இருக்க முடியுமா? என்று அவருக்கு பல கட்டங்களாக மருத்துவ பரிசோதனை செய்து தான் பிக் பாஸ் வீட்டிற்குள் விடுவார்கள். எனக்கும் அத்தனை மருத்துவ பரிசோதனையும் நடந்தது.
அதற்குப் பிறகுதான் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். முதல் டாஸ்க்கில் எனக்கு அடிபட்ட போது கூட பிக் பாஸ் உங்களால் தொடர்ந்து விளையாட முடியுமா என்று கேட்டார். ஆனால் நான் கான்பிடென்ட் ஆக முடியும் என்று விளையாடினேன் அதனால்தான் எனக்கு கால் வலி அதிகமாகி விட்டது.
அதுபோல நான் நடக்கும் போது மூச்சு சத்தம் கேட்கிறது. இவரால் உட்காரவும் முடியல எழுந்து நடக்கக்கூட முடியல இப்படி மூச்சு வாங்குவது என்று பலர் கேள்வி கேட்டதை நானும் பார்த்தேன். எனக்கு கழுத்து பக்கத்தில் மைக் இருப்பதால் நம்முடைய மூச்சு சத்தம் அவ்வளவு வேகமாக கேட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மத்தபடி பேட்டிகளில் பேசும்போது நான் அப்படியா மூச்சு விடுகிறேன்.
அது போல சில பெண்கள் எனக்கு ஏதாவது உதவி செய்யட்டுமா அண்ணா என்று வந்து கேட்பார்கள். ஆனால் அவர்கள் பாசத்திற்காக கேட்கிறார்களா என்றால் கேள்வி குறிதான். ஒவ்வொரு முறையும் நம்மிடம் ஏதாவது செய்யவா என்று கேட்டுக் கொண்டு கேமராவை பார்ப்பவர்கள் தான் அங்கு ஏராளமானோர் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் முத்துக்குமரன் உட்பட ஒரு சிலர் உண்மையான பாசத்தோடும் இருக்கிறார்கள். முத்துக்குமரன் விளையாட்டு அருமையாக இருக்கிறது. என்னுடைய இடத்தை அவன் நிரப்பி விட்டான் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவன் என்னை விட சிறப்பான ஆட்டக்காரன் என்றார்.
நிச்சயம் இந்த சீசனில் முத்துக்குமரன் தான் டைட்டில் வின் பண்ணுவார் என்று டைப் பண்ற ரவீந்திரன் அவர்கள் அடித்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here