லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, டி.எஸ்.கே உள்ளிட்ட முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைததுள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற கேப்டனின் பாடலான “பொட்டு வைத்த தங்கக் குடம்” பாடல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. லப்பர் பந்தை பார்த்த ரசிகர்கள் பலர், சமூக வலைதளங்களில் இந்தப் படத்திற்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். தங்க சல்கிலி 3 பவுன், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேல் இருக்கும். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
புதிதாக நடிக்க வந்தாலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்களின் இந்த செயல் தயாரிப்பாளர்கள் மத்தியிலும், இயக்குநர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here