Did the famous actress ask Parthiban like this : திரைக்கதை மன்னன் என அழைக்கக்கூடிய பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணி செய்து, பின் புதிய பாதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் கதாநாயகனாக முதல் படத்திலேயே அறிமுகமானார். இவருக்கு நாயகியாக சீதா நடித்தார். மேலும் அந்தப் படத்தில் மனோரமாவும் நடித்திருந்தார். அந்த படமும் தேசிய விருதை பெற்றது.அப்போதிலிருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக இருக்கிறார் பார்த்திபன். இந்தச் சூழலில் அவர் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள விஷயம் பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது.

கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் பார்த்திபனும் ஒருவர். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டக்கூடியதில் பார்த்திபன் வல்லவர். பார்த்திபன் இயக்கிய உள்ளே வெளியே, ஹவுஸ்புல் மற்றும் குடைக்குள் மழை போன்ற படங்கள் அந்த வகையை சேர்ந்தவை. இருந்தாலும் இயக்குநராக அவர் இயக்கிய பல படங்கள் வணிக ரீதியில் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் சில காலம் படம் இயக்கு வதிலிருந்து ஒதுங்கியிருந்தார்.ஆனால் பார்த்திபன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
நடிப்பில் மிரட்டிய பார்த்திபன்:
நடிப்பில் கவனம் செலுத்திய பார்த்திபனுக்கு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான அந்தப் படத்தில் பார்த்தீபன் சோழ மன்னர் கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்து அனைவருமே மிரண்டு தான் போனார்கள். பார்த்திபன் அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருந்தார். பார்த்திபன் சின்ன பழுவேட்டரையராக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார்.
கதையே இல்லாமல் ஒரு படம்: இந்தச் சூழலில் சில காலம் இயக்குவதிலிருந்து ஒதுங்கியிருந்த பார்த்திபன் இயக்குநராக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் மறுபடியும் வந்தார். அந்தப் படம் கதையே இல்லாமல் உருவானது. அஞ்சான் படத்தோடு வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் தந்த வரவேற்பின் உற்சாகத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு அவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்களும் சுமாரான வரவேற்பைப் பெற்றன.

விவாகரத்து: இதற்கிடையே பார்த்திபன் புதிய பாதை படத்தில் நடித்தபோது தன்னுடன் கதாநாயகியாக நடித்த சீதாவை காதலித்தார். அவர்கள் சில காலம் காதலித்து பின் திருமணமும் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பின் அவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை எதிர்பார்க்காத விதமாக பிரிவில் முடிந்தது. இருவரும் அதற்கான காரணத்தை இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. இருந்தாலும் அவர்களின் பிரிவை பற்றி பல யூகங்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Did the famous actress ask Parthiban like this
விவாகரத்துக்கு காரணம்: பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில், “காதலித்து திருமணம் செய்துகொள்கிற நடிகர் – நடிகைகளுக்கு ஏன் பெருபாலும் விவாகரத்து நடப்பதாக அவர்களிடமே கேட்டுள்ளேன்.அதற்கு அவர்கள் சூசகமாக சொல்லும் பதில் என்னவென்றால், ‘திருமணம் செய்துகொண்ட பிறகு நடிகைகள் ஹவுஸ் வைஃபாக இருக்க வேண்டும்’ என்று சொல்வதுதான். ஆனால் நடிகைகள் அதை ஏற்று கொண்டு வீட்டிலேயே இருந்து கொள்கிறார்கள். நடிகர்களோ திருமணம் நடந்த பின்பும் மற்ற பெண்களுடன் பழக்கத்தில் இருக்கிறார்கள். அது போல இருக்கும் நடிகர்களிடம் பெண்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்.

தூது விட்ட பார்த்திபன்?:
பார்த்திபன், சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் நடிகை சௌந்தர்யாவுடன் பார்த்திபன் நடித்த போது அவருக்கு தூது விட்டார். அதை நடிகை சௌந்தர்யா இந்த விஷயத்தை சீதாவிடம் கூறிவிட்டார். மேலும் உங்கள் மனைவியும் அழகாகத்தான் இருக்கிறார் என்று பார்த்திபனிடம் சௌந்தர்யா சொல்லியிருக்கிறார். உங்கள் மனைவியை விட நான் அழகில் உயர்ந்தவளா என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார். இந்த இடத்திலிருந்துதான் பார்த்திபன் – சீதா பிரிவு ஆரம்பித்தது” என்றார் பயில்வான் ரங்கநாதன்.
இதையும் படிங்க : நிச்சயதார்த்தத்தின் போது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது வரலட்சுமியோ, மாப்பிள்ளையோ கிடையாது, இந்த இரண்டு பேர் தான்
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here