டிரைவர் முதல் பணியாட்கள் வரை .. சில்க் ஸ்மிதா அதுபோலத்தான் நடந்துக்குவாங்க – பிரபலம் பளீச்!

0
169

நடிகை சில்க் ஸ்மிதா பற்றி இயக்குநர் கிருஷ்ணா வம்சி பேசியுள்ளார்.

சில்க் ஸ்மிதா

80-ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என எல்லா மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

கிறங்க வைக்கும் கண்கள், சொக்கி இழுக்கும் வனப்பு, திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. இவர் 1996-ம் வருடம் தனது 35 வயதில் இறந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், சாவில் மர்மம் இருக்கிறது என்றும் இரு விவாதங்கள் நடந்தன. இந்நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி நடிகை ஜெயமாலினி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் “ஒரு படத்தில் கதாநாயகனை சுற்றி வரும் நடிகைகளாக நான், ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா 3 பேரும் நடித்திருந்தோம்.

பெரிய தவறு

சில்க் ஸ்மிதா மிக உயரத்தில் இருந்தவர். ஆனால் அந்த நிலையில் இருக்கும் போது அவர் தற்கொலை செய்துகொண்டது வருத்தமான செயல். தனது வாழ்க்கையில் அவர் செய்த பெரிய தவறு ஒன்று இருக்கிறது.

அது காதல். காதலிக்கலாம் அது தவறில்லை. ஆனால் பெற்றோரை விலக்கி வைக்கக்கூடாது. அவர் தனது தாயையும், சகோதரனையும் விலக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டுமே நம்பி வாழ்ந்தார். ஆனால் உறவினர்களை அருகில் வைத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் நமது பணத்தை பாதி தின்றாலும் சிறிதாவது நமக்காக வைப்பார்கள்.

ஆனால் ரத்த சொந்தம் இல்லாதவர்கள், முக்கியமாக நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று அவர்கள் தெரிந்துவிட்டால் ஏமாற்றுவார்கள். அது போலத்தான் சில்க் ஸ்மிதாவும் பலியானார்” என்று கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here