தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இன்றுவரை வலம்வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற “மனசிலாயோ” பாடல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது

இந்தப் படத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும், தர்பார் படம் போல இருப்பதாக பார்வையாளர்கள் குறை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க…
இதிலும், பெண் படுகொலை, அதற்கு நீதிக்கேட்டு போராடுவது-னும்,
இதிலும், ரஜினி போலீஸ் வேஷமா-னும் மக்கள் கேட்குறாங்க? எனவே நம்ம படம் வெளியாகி தான் பார்க்க வேண்டும் “வேட்டையனின் பாய்ச்சலை”
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here