Gautham Menon wrote the story Vtv for him : தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான இயக்குனராக வலம் வந்து கொண்டிருபவர் கெளதம் மேனன். காதலே அழகு அதை மேலும் அழகுடன் திரையில் காட்டுவது தான் இவரின் வழக்கம். அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் எவர்கிரீன் காதல் படைப்பாக வெளியான ஒரு படமே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்நிலையில் இப்படத்தின் கதை முதலில் வேறு ஒரு கதாநாயகனுக்காக எழுதப்பட்டதாக கெளதம் மேனன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கெளதம் மேனன் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது, அவர் படங்களின் காதல் காட்சிகள் தான். இந்த நவீன காலத்திலும் பெண்கள் மீதான வன்முறைகளை ஹீரோயிசமாக காட்டி ரூ.1000 கோடி வரை வசூல் செய்து வரும் படங்களுக்கு மத்தியில், காதலையும் காதலிக்கப்படும் கதாநாயகிகளையும் தனது படங்களில் ரொம்ப மரியாதையாக, தேவதைகளாக காட்டுவது தான் கெளதமின் வழக்கம்.
அப்படி கெளதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் வருஷம் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. கார்த்தியாக சிம்பு , ஜெஸ்ஸியாக திரிஷா இவர்கள் நடித்து ரிலீசான இந்தப்படம் தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடப்படுகின்ற எவர்கிரீன் படமாக திகழ்கிறது. இந்து குடும்பத்தை சேர்ந்த தமிழ்நாட்டு பையனுக்கும், மலையாள கிறிஸ்துவ பெண்ணுக்கும் இடையிலான காதல் தான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம்.
இதையும் படிங்க : நயன்தாரா சிறிதளவும் மாறவே இல்லை: நடிகை மாலா பார்வதி நெகிழ்ச்சி

இதனை தன்னுடைய ஸ்டைலில் அருமையான, அழகான காதல் படமாக இயக்கியிருப்பார் கெளதம் மேனன். உலகத்துல எவ்வளவு பொண்ணுங்க இருக்கும் போது.. நான் ஏன் ஜெஸ்ஸியா லவ் பண்ணேன். உன் கண் வழியா யாரும் என்னை பார்க்கல போல. காதலை நம்ம தேடி போக முடியுமா என்ன? என படம் முழுக்க கவிதைகளாக நிறைந்திருக்கும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களுக்கும் மனப்பாடம். கெளதம் மேனனின் எழுத்து ஒருபுறம் என்றால் ஏ.ஆ. ரஹ்மானின் இசை மற்றொரு புறம் முத்திரை பதித்து இருக்கும்.
Gautham Menon wrote the story Vtv for him
அது மட்டுமின்றி ஒவ்வொரு காதலர் தினத்துக்கும் இப்படத்தை தவறாமல் ரீ ரிலீஸ் செய்யப்படுவதும் வழக்கம். இப்படி பல சிறப்புகள் வாய்ந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் கதையை முதலில் மகேஷ் பாபுவுக்கென்று தான் எழுதினாராம் கெளதம் மேனன். ஆனால் காதல் கதை என்பதால் வேண்டாம் என்றும் ஆக்க்ஷன் கதையாக பண்ணலாம் எனவும் மகேஷ் பாபு சொல்லி விட்டாராம். முதலில் ஆக்க்ஷன் கதையாக தான் தயாரிப்பு நிறுவனம் எழுத சொல்லியதாம்.

இந்த கதையில் மகேஷ் பாபு நடிக்கப்போவதாக எழுதும் போதே முதலில் வந்ததே ‘உலகத்துல எவ்வளவு பொண்ணுங்க இருக்க போதும். நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்’ என்பது தானாம். இதனால் மகேஷ் பாபு ஆக்க்ஷன் கதையாக கேட்டதால் இக்கதையை தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தாவை வைத்தும், தமிழில் சிம்பு, திரிஷாவை வைத்தும் இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இந்த தகவலை நேர்காணலின் போது கெளதம் மேனன் பகிர்ந்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நல்லவேளையாக மகேஷ் பாபு இந்த கதையை பண்ணவில்லை. அவருக்கு கெளதம் மேனன் ஸ்டைலில் ‘காக்க காக்க’ போல் ஆக்க்ஷன் படம் தான் பொருந்தும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் போல முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய கதை சரிவராது என கூறி வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here