மீண்டும் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பலரும் பீதியில் உள்ளனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை, அதனை எப்படி தற்காத்து கொள்ளலாம் என்பதனை பார்க்கலாம்.
இந்தியாவில் HMPV வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் குறித்து பீதியடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சகமும், மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளனர். இது புதிய நோய்க்கிருமி அல்ல என்றும், வழக்கமான ஃப்ளூ ஷாட்கள் அல்லது மூன்று COVID-19 தடுப்பூசி டோஸ்கள் உங்களை இந்த நோய்த்தொற்றிலிருந்து தடுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது ஒரு புதிய வைரஸ் இல்லை என்பதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்றும், பீதியடையத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக குளிர்கால மாதங்களில் சிலர் பாதிக்கப்படுவார்கள். இது இருமல், சளி மற்றும் சுவாச பிரச்சனைகளுடன் கூடிய வழக்கமான வைரஸ் காய்ச்சல் மட்டுமே என்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் நிஹார் பரேக் தெரிவித்துள்ளார். HMPV வைரஸ் சீனாவில் பரவியதை தொடர்ந்து தற்போது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here