ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கும் புதிய படத்திற்கு “இட்லி கடை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு நடிகர்.ராஜ்கிரன், நடிகர் பிரசன்னா, நடிகை ரேவதி அவர்களை வைத்து ப.பாண்டி என்னும் படத்தின் மூலம் இயக்குநராக தனது முதல் வெற்றி கண்டார். அதன் பிறகு 2024ஆம் ஆண்டு “ராயன்” படத்தை இயக்கிஞ, அதிலும் வெற்றி கண்டார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
3வது படம்:
இந்நிலையில், புதிதாக 3வது படத்தையும் இயக்க நடிகர் தனுஷ் திட்டமிட்டு உள்ளார். அந்த படத்திற்கு “இட்லி கடை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் யார்?
இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் எனும் தயாரிப்பாளர் தனது ‘டாவுன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் முதல் படமாக தயாரிக்கின்றார். இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘இட்லி கடை’ என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here