Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

என்னங்க இவ்வளவு பிரச்னை இருந்தாலும், அப்டேட்-லா விடுறாரு நம்ம ஜெயம் ரவி…

“ஜெயம்” என்ற படத்தின் மூலம் நாயகராக உருவான கலைஞர் தான் ஜெயம் ரவி. பின்னர் அவர் தனது அண்ணன் இயக்கத்தில் நடித்த படம் அனைத்தும் சூப்பர் டூப்பர்…

“ஜெயம்” என்ற படத்தின் மூலம் நாயகராக உருவான கலைஞர் தான் ஜெயம் ரவி. பின்னர் அவர் தனது அண்ணன் இயக்கத்தில் நடித்த படம் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். நடிகர் ஜெயம் ரவி அவர்களுக்கு சிறிது இடைவெளிக்கு பிறகு நல்ல வரவேற்றைப் பெற்று தந்த படம் “மோமாளி”. 

அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி அவர்களுக்கு வெற்றி முகம் தான். இடையில் “பூமி, அகிலன்” உள்ளிட்ட படங்கள் சறுக்கலை சந்தித்தாலும், ஜெயம் ரவி மார்க்கெட்டுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் எடுத்த “பொன்னியின் செல்வன்” படம் கூட மாபெரும் வெற்றியை பெற்றது.

ஆனால் ஜெயின் ரவி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு வெற்றிகரமாக அமையவில்லை. மனைவி விவாகரத்து செய்யக்கூடிய நிலைமையில் உள்ளார். மனைவியுடன் இத்தனை ஆண்டு காலம் போராட்டம் நடத்திவிட்டு தற்போது பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். பெரும் மன உளைச்சலுக்கு ஜெயம் ரவி ஆளாகியுள்ளார்.

Advertisements

இந்த நிலையில், ஜெயம் ரவியின் 34-வது படத்தை ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். படத்தில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னம் எழுதியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here