Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

இயக்குநராக சாதித்துக் காட்டிய மதுரை இளைஞர் : கொட்டுக்காளி நடிகை நடிக்கும் பாட்டன்

சிறு பொருட்செலவில் கிராமத்தின் இயல்பையும், எளிய மக்களின் வாழ்வியலையும் யதார்த்தமாக செல்லும் படம் “பாட்டன்”. தாத்தாவுக்கும், அதாவது போன தலைமுறைக்கும், இந்த தலைமுறைக்கும் உள்ள தொடர்பு, இடைவேளை,…

சிறு பொருட்செலவில் கிராமத்தின் இயல்பையும், எளிய மக்களின் வாழ்வியலையும் யதார்த்தமாக செல்லும் படம் “பாட்டன்”. தாத்தாவுக்கும், அதாவது போன தலைமுறைக்கும், இந்த தலைமுறைக்கும் உள்ள தொடர்பு, இடைவேளை, பாசம், வாழ்க்கை முறை பற்றி இந்தப்படம் சொல்கிறது.

பாட்டன் படத்தை மதுரை சேர்ந்த மிக இளம் இயக்குநர் ப்ரீத்தி குமார் என்பவர் இப்படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற “கொட்டுக்காளி” படத்தில் சூரிக்கு தங்கச்சியாக நடித்து புகழ்பெற்ற “அபிநயா” இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலன் என்பவர் இப்படத்தில் “பாட்டனாக, அதாவது தாத்தாவாக தத்ரூபமாக நடித்துள்ளார்”.

Advertisements

இப்படத்தில் நடித்த ஒரு சிலர் தவிர அனைவரும் புது முகம் தான். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இது முதல் படம். அனைவரும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது, ஒரு தரமான படத்தை தான் மக்களுக்கு இயக்குநர் ப்ரீத்தி குமார் தந்துள்ளார் என்பது நமக்கு தெரிய வருகிறது.

இப்படத்தின் இயக்குனர் பிரதீப் குமார் அவர்களையும், நடிகர் பாலன், நடிகை அபிநயா உள்ளிட்ட படக்குழுவினரை “நம்ம கோலிபிளிக்ஸ் சேனல்” சிறப்பு நேர்காணல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here