“82 வயசாகிடுச்சே இனி என்ன பண்ணுவார் என நினைக்காதீங்க இது ஆரம்பம்தான்” என இளையராஜா செய்தியாளர்கள் முன்னணியில் மாஸ் காட்டியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் சிம்பஃனி இசை நிகழ்ச்சி வெளிநாட்டில் அரங்கேறியது .
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பாளிக்கப்பட்டது.
இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதேபோன்று திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரமுகர்களும் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பாளித்தனர்.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது: இளையராஜா அவர்களால் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஆசிய கண்டத்திற்கு பெருமை எனவும், மிகப்பெரிய உலக சாதனையை நிகழ்த்திய தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த இளையராஜா: அரசு மரியாதையுடன் வரவேற்ற முதல்வருக்கு எனது நன்றிகள் என பெருமிதம் தெரிவித்தார்.
ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கிறார்கள் நான் சாதாரண மனிதர் தான். பனைப்புரத்திலிருந்து இன்று வரை எனது கால்களில் நடந்து எனது கால்களில்தான் நான் நிற்கிறேன். “82 வயது ஆகிவிட்டது என நினைக்க வேண்டாம் இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன்” என இளையராஜா தெரிவித்தார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here