கோடிக்கணக்கில் புது வீடு, சொகுசு கார் வாங்கி பிரியா பவானி சங்கர் : காரணம் இதுவா ?

0
162

நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பிளாட் ஒன்றையும், சில கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சொகுசு காரையும் வாங்கியுள்ளது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்து வந்த பாதை :-

புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பிறகு விஜய் டிவி சீரியலான “கல்யாண முதல் காதல் வரை” என்னும் சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் தோன்றி அசத்தினார். அப்படமும், பிரியா பவானி சங்கர் அவர்களின் கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் பரியா அவர்களுக்கு நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்று தந்தது. 

இருப்பினும் அடுத்தடுத்த படங்கள் பிரியா பவானி சங்கர் அவர்களுக்கு குவிந்தாலும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி எதுவும் கொடுக்கவில்லை. பிரியா பவானிசங்கர் ஒரு ராசியில்லாத நடிகை என்றுதான் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இறுதியாக அவர் நடித்த “டிமான்டி காலனி 2” படம் வெற்றி பெற்றது.

புது பிளாட் – சொகுசு கார்

இந்நிலையில் சில லட்சம் முதல் 30 லட்சம் வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கும் பிரியா பவானிசாகர் அவர்கள் தற்போது பல கோடி  மதிப்பிலான பிளாட் ஒன்றை சென்னையில் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் வெளிநாட்டு சொகுசு காரையும்  வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

யார் அந்த நடிகர்? 

இது குறித்து தமிழ் சினிமா வட்டாரத்தில் மூத்த நடிகர் ஒருவர் பிரியா பவானி சங்கர் அவர்களுக்கு பிளாட்-ஐ வாங்கிக் கொடுத்ததாகவும், மற்றொரு தயாரிப்பாளர் ஒருவர் கார் வாங்குவதற்கு பண உதவி செய்ததாகவும் பேசப்பட்டு வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here