Home Entertainment ஒரு முட்டாளான ஆளை நம்புவது தான்…வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் பதிவு!

ஒரு முட்டாளான ஆளை நம்புவது தான்…வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் பதிவு!

0
225

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் ‘சுல்தான்’ மற்றும் ‘வாரிசு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.அது மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை மிகவும் கவர்ந்து வருகிறார்.

இவர் சமீபத்தில், ரன்பீர் கபூருடன் நடித்த ‘அனிமல்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. மெகா ஹிட் அடித்த இந்த படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.

வைரல் பதிவு

இந்நிலையில், ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் அனிமல் திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகாவுடன் ரன்பீர் கபூர் பேசும் சில காட்சிகளை தொகுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு திரிப்தி டிம்ரி கதாபாத்திரத்தின் மீது பழக்கம் உண்டாகும்.

அதனை வெளியிட்ட அவர் அந்த பதிவில், ‘ஒரு மனிதனை நம்புவதை காட்டிலும் பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த ராஷ்மிகா மந்தனா, அந்த ரசிகரின் பதிவிற்கு மறு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘திருத்தம் ஒரு முட்டாள் நபரை நம்புவது பயங்கரமானது. பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த நல்ல மனிதர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல்,’என தெரிவித்துள்ளார். தற்போது அவரது இந்த வரிகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here