Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவார்கள் : நடிகை ரேகா நாயர்

தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவார்கள் என்று சர்ச்சைக்குரிய நாயகியான ரேகா நாயர் தெரிவித்துள்ளார் சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு…

தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவார்கள் என்று சர்ச்சைக்குரிய நாயகியான ரேகா நாயர் தெரிவித்துள்ளார்

சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து நடிகை ரேகா நாயர் மனம் திறந்து பேசி உள்ளார். 

அவர் கூறியதாவது, அனைத்து மொழி சினிமாவிலும் பாலியல் அத்துமீறல் உள்ளன. தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் புகார்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் ஏதேனும் அறிக்கை வெளியானால் 500 பேர் சிக்குவார்கள் என்று பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார். மேலும், புகார் கூறும் நடிகைகளுக்கு பிரபல நடிகர்களால் மிரட்டல் வருகிறதாகவும் நடிகை ரேகா நாயர் அச்சம் தெரிவித்துள்ளார்.

Advertisements

ஏற்கனவே மலையாள சினிமாவில் ஹேமா குழுவின் அறிக்கை வெளியாகி பல முன்னணி மலையாள சினிமா நடிகர்கள் அச்சத்தில் உள்ளனர். ஹேமா குழுவின் அறிக்கை வெளியான பிறகே மலையாளம், தமிழ், தெலுங்கு என  தென்னிந்திய நடிகைகள் பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here