மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூத்த சகோதரரை காண நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் 70 வயதுக்கு மேல் ஆகியும் இன்னமும் அதே சுறுசுறுப்புடன் ஹீரோவாகவே நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “கூலி” திரைப்படத்தின் வரவேற்பை தொடர்பு நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் “தலைவர் 173″படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகார பூர்வமான தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரரான சத்யநாராயண ராவ் கெய்க்வாட் (வயது 84) என்பவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவின் ஹோசகேரே கிராமத்தில் வசித்து வரும் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் பெங்களூருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டை நேராக எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். ரஜினிகாந்தின் சகோதரர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவான (ICU) வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


