Singer Suchitra gave a sensational interview : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றியதாக பகீர் குற்றச்சாட்டை பாடகி சுசித்ரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். இருவரில் தனுஷை காட்டிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் மிகவும் மோசம் என்றும் அவர் தான் அதிகமாக தனுஷை ஏமாற்றியதாக சுசித்ரா கூறி உள்ளார்.
சூரியன் எஃப்எம் ஆர்ஜேவாக இருந்துபுகழ் அடைந்தவர் சுசித்ரா. அதன் பிறகு “மன்மதன்” படத்தில் “என் ஆசை மைதிலியே”, காளை படத்தில் “குட்டி பிசாசே”, “போக்கிரி” படத்தில் இடம்பெற்ற “என் செல்லப்பேரு ஆப்பிள்’ என அநேக ஹிட் பாடல்களை பாடி ஒரு கட்டத்தில் நம்பர் ஒன் பாடகியாக வலம் வந்தார்.
“யாரடி நீ மோகினி” படத்தில் தனுஷ் நண்பராக நடித்த கார்த்திக் குமாரும் சுசித்ராவும் காதலித்து கல்யாணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்கள் வாழ்க்கையையே சுச்சி லீக்ஸ் விவகாரம் புரட்டிப் போட்டு விட்டது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து:
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணமே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் இருவரும் அதையெல்லாம் தாண்டி 17 வருடங்கள் 2 மகன்களை பெற்று வளர்த்து திருமண வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2022 ம்வருடம் பிரியப் போவதாக அறிவித்து அதிர்ச்சியை உண்டாக்கினர். சமீபத்தில், சட்டப்பூர்வமாக இருவரும் விவாகரத்து பெற்றது மேலும், அதிர்ச்சியை கிளப்பியது.
சுச்சி லீக்ஸ் சமயத்தில் கூட:
நடிகர் தனுஷ் பெயர் சுச்சி லீக்ஸ் சமயத்தில் அடிபட்டு சில போடோக்களும் கசிந்தன. சில முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்த வீடியோக்கள் வெளியாகி ஷாக்கை ஏற்படுத்தின. அப்போது கூட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவை பற்றி அறிவிக்கவில்லை.
“3” படத்தின் போது பஞ்சாயத்து:
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து ரொம்ப நெருக்கமாக “3” படத்தில் நடித்தபோது தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் டேட்டிங் சென்றதாக சர்ச்சைகள் உண்டானது. அப்போதே தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து செய்து பிரியப் போவதாக வதந்திகள் கிளம்பியது. ஆனால், அந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து தற்போது திடீரென இருவரும் பிரிய அதைவிட பெரிய பிரச்சனை கிளம்பியிருக்கும் என்று பலரும் கூறி வரும் நிலையில், பாடகி சுசித்ரா தனுஷை காட்டிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் மிகவும் மோசமானவர் என்றும் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி இருக்கின்றனர் என்றும் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ரொம்ப மோசம்:
தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் அறைக்குள் தனியாக படுக்கையில் என்ன என்ன செஞ்சாங்க தெரியுமா? என சுசித்ரா படுமோசமான குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், தனுஷை பார்த்தால் அறைந்து விடுவேன் என்று சொன்னார். ஆனால், டெவிலை விட டீப் சீ தான் மிகவும் ஆபத்தானது என தனுஷை காட்டிலும் ஐஸ்வர்யா மிகவும் மோசம் என சமீபத்திய பேட்டியில் சுசித்ரா பேசி உள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவின் இந்த பேச்சை கேட்டு அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். சுசித்ரா தொடர்ந்து தனுஷ் குறித்து அவதூறு கருத்துக்களை அடுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here