Suchitra is furious with Bailwan : பல பிரபலங்கள் பற்றி விமர்சித்து பேசி கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதனை… செத்து போயிடு, தற்கொலை செஞ்சிக்கோ என பேட்டி ஒன்றில் தாக்கி பேசி உள்ளார் பாடகி சுசித்ரா.
பிரபலங்களின் வாழ்க்கையை பற்றி சொல்கிறேன் என்கிற பெயரில்… பல ஜோடிக்கப்பட்ட தகவல்களை சொல்லி, கடந்த சில ஆண்டுகளாகவே பல பிரபலங்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாகி கொண்டிருபவர் பயில்வான் ரங்கநாதன். ராதிகா, ரேகா நாயர் மற்றும் விஷால் போன்ற பலர் இவரை மேடைகளில் கடுமையாக திட்டி தீர்த்து கொண்டிருந்த போதிலும் தன்னுடைய விமர்சனத்தை தொடர்ந்து செய்து வருகிறார்.

சென்ற வாரம் பயில்வான் ரங்கநாதன், குழலி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஷகிலாவும் கலந்துகொண்டார். அப்போது ஊரிலுள்ள பிரபலங்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளை பற்றி பேசும் உங்களுடைய கடைசி மகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? என்றும்… அவர் யாரை காதலிக்கிறார் என்று தெரியுமா? என ரைட் அண்ட் லெப்ட் வாங்கினார் ஷகிலா.. அவர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், இது என்னிடம் நெருக்கமானவர்கள் சொல்லி நான் கேட்டது. போய் உங்கள் மகளிடம் கேட்டு பாருங்கள் என சொன்னதும்… பயில்வான் முகம் காற்று போன பலூன் மாதிரி புஸ் என ஆனது.
மேலும் உங்கள் வீட்டு பெண்ணை பற்றி சொல்லும் போது உங்களுக்கு எப்படி வலிக்கிறதோ… அப்படி தான் மற்ற பிரபலங்களை குறித்தும் அவர்களின் பிள்ளைகளை குறித்தும் நீங்கள் பேசுவது இருக்கும் என தெரிவித்தார்.
இந்த ரண களம் அடங்கும் முன்பே… பயில்வானை செத்துப்போ என சொல்லி பேட்டியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார், பாடகி சுசித்ரா. பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த சுசித்ரா, கணவர் கார்த்திக், தனுஷ், ஐஸ்வர்யா போன்ற பலரை பற்றி பேசியுள்ளார்.
அப்போது தொகுப்பாளர், பல பிரபலங்களை குறித்து விமர்சித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு “செத்துப் போ… நாசமா போ… சீக்கிரமே செத்துப் போ.. உன் பொண்ணு ரொம்ப உறுப்புடும்” என வாய்க்கு வந்தது போல சாபம் விட்டார்.
பின்னர் தொகுப்பாளர் ஏன் இப்படி ஒரு சாபம்? என கேட்டார்… செத்துப் போ.. முடிஞ்சா தற்கொலை செய்து கொண்டு செத்துப் போ.. இது வந்து என்னுடைய சாபம் கிடையாது அவரிடம் ரிக்வெஸ்ட் ஆக கேட்கிறேன். செத்துப் போ என்று சொல்வது ஒரு ரிக்வெஸ்டா என தொகுப்பாளர் அதிர்ச்சியாகி கேட்க, ஆமாம் அவங்க வீட்டு பக்கத்துல உள்ள கடலுக்கு நேரா நடந்து சென்று செத்துப் போய் விடு… அப்படியே நடந்து போய்க்கொண்டே இரு, திரும்பி கூட பார்க்காத.

இது தான் அவருக்கு நல்லது. இல்லன்னா யாராவது உன் மண்டையில போட்டு விடுவாங்க. அது ரொம்ப அசிங்கமா இருக்கும். அடி வாங்கி நீ சாகரத்துக்கு நீயே செத்துப்போயிடு என கூறி இருக்கிறார். சுசித்ராவின் இந்த பேச்சுக்கு பலர் தங்களின் கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here