இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார்? யார் தெரியுமா? 

0
96

வெளி உலகின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப, சினிமா உலகமும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ரசிகர்களின் ரசனைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் சிலருக்கு மணிரத்னத்தின் படங்கள் பிடித்தது. ஆனால் இப்போது அவரது படங்கள் பிடிக்காத சிலரும் இருக்கின்றனர். கோலிவுட்டை பொறுத்த வரை, எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் அவரது பல படங்களில், ஏதாவது ஒன்றாவது தோல்வி அடைந்திருக்கும். அந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும், அவை பல சமயங்களில் தோல்வி அடையளாம். ஆனால், மாடர்ன் தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் தோல்வியே தராத படங்களை கொடுத்திருக்கின்றனர்.  அவை யார் தெரியுமா?

மாரி செல்வராஜ்

புரட்சிமிகு இயக்குநராக கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வருபவர், மாரி செல்வராஜ். இவர் முதன் முதலில் இயக்கி வெளிவந்த படம், பரியேறும் பெருமாள். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் படும் துன்பங்களை பார்ப்பவர் மனம் பாதிக்கப்படும் வகையில் கூறிய மாரி செல்வராஜ், அடுத்து  கர்ணன் படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

கடந்த ஆண்டு, இவர் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விம்ரசனங்களை பெற்றாலும் சரியான சினிமா ரசிகர்களை சென்றடைந்து. வசூலையும் பெற்றது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் ‘வாழை’ படம் வெளியானது. இந்த படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்தவர்கள் மாரி செல்வராஜை முத்தமிட்டு கொண்டாடி வருகின்றனர். 

அட்லி

சினிமாவிற்கு வந்த வெகு சில ஆண்டுகளிலேயே டாப்பிற்கு சென்று விட்ட இயக்குநர்களுள் ஒருவர் அட்லீ. “ராஜா ராணி” படத்தை இயக்கி ஹிட் ஆக்கிய இவர், முதலில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தார். எடுத்த 4 படங்களில் மூன்று படங்கள் விஜய்யை வைத்துதான் எடுத்தார்.  தெறி, மெர்சல், “பிகில்” ஆகியவை நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட் ஆகின. இதையடுத்து பாலிவுட்டிற்கு சென்ற அவர், ஜவான் படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார். இவர் இயக்கிய 5 படங்களில் ஒரு படம் கூட தோல்வி அடையவில்லை. 

வெற்றிமாறன்

பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.  அப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. அதன் பிறகு தனுஷ், ஜி.வி. பிரகாஷ், வெற்றிமாறன் கூட்டணியில் “ஆடுகளம்” படம் வெளியானது அப்படம் தேசிய விருதுகளை வென்றது. அதனை தொடர்ந்து “விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை” என வெற்றிமாறன் இயக்கிய படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிகளை பெற்றது. இதில் “அசுரன், ஆடுகளம்” ஆகிய இரு படத்திற்கும் தேசிய விருதுகள் கிடைத்தது. வெற்றிமாறன் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட கூடிய படமாக தான் இருக்கும்.  

மாரி செல்வராஜ், அட்லீ மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரின் வெற்றிக்கும் ஒரே காரணமாக இருப்பது, அவர்களின் கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் எளிதாக சென்று அடைய முடிகிறது என்பதுதான். மாரி செல்வராஜ், தன் வாழ்விலும் தன்னை சுற்றியும் நடந்த விஷயங்களை இயல்பாக உண்மை மாறாமல் எடுத்து கூறுகிறார். அட்லீ, மாஸ் ஹீரோக்களாக தன் படங்களில் நடிக்க வைத்து, எடுத்த கதையே திரும்ப எடுத்தாலும் அதனை ஓட வைக்கிறார். வெற்றிமாறன் அவர்கள் தன் படங்களில் எதார்த்த மனிதர்களை கதாநாயகர்களாக ஆக்கி, தேர்ந்தெடுக்கும் கதைக்களத்தின் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துகளை சொல்லி விடுவார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here