நிச்சயதார்த்தத்தின் போது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது வரலட்சுமியோ, மாப்பிள்ளையோ கிடையாது, இந்த இரண்டு பேர் தான்

0
293

Varalakshmi Engagement : தமிழ், தெலுங்கு திரையுலகில் சூப்பர் பிசியாக இருந்து கொண்டுள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஒரு திருணம் நடக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள். இந்நிலையில் தான் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான நிக்கோலய் சச்தேவுக்கும், வரலட்சுமிக்கும் மார்ச் 1ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மும்பையில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலரும் பங்கேற்றார்கள். வரலட்சுமி நிச்சயதார்த்தத்தில் எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் .

அவர் வெளியிட்டிருக்கும் 2 புகைப்படங்கள் தான் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. நிச்சயதார்த்தத்தில் வரலட்சுமியோ, நிக்கோலய் சச்தேவோ இல்லை மாறாக வேறு 2 பேர் தான் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளனர்.

அந்த 2 பேர் வேறு யாரும் அல்ல. சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாவும், மகன் ராகுலும் தான். புகைப்படத்திற்கு ராதிகா சரத்குமாரின் மகள் ரயன் மிதுனும், சாயாவும் அருகருகே நின்று போஸ் கொடுத்துள்ளார்கள். அதை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, வரலட்சுமியின் நிச்சயதார்த்த விழாவில் ரயன் மிதுனையும், சாயாவையும் இப்படி அருகருகே பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

ராதிகாவுடன் வரலட்சுமியும், தங்கை பூஜாவும் சேர்ந்து அடிக்கடி புகைப்படம் எடுக்கிறார்கள். அதனால் அதில் ஆச்சரியம் கிடையாது. ஆனால் ரயனை சாயாவுடன் சேர்ந்து பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வரலட்சுமி நிச்சயதார்த்தத்தில் சரத்குமாரின் 2 மனைவிகளும் ஒற்றுமையாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

இதையும் படிங்க : உங்க face அ பொலிவாக்கணுமா இத பண்ணுங்க

ராதிகா, சரத்குமாரின் மகன் ராகுல் என்ன அப்பாவை காட்டிலும் உயரமாக வளர்ந்திருக்கிறார். ராகுல் கதாநாயகன் மாதிரி சும்மா ஜம்முனு இருக்கிறாரே. ராகுலை சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கும் யோசனை உள்ளதா ராதிமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வரலட்சுமிக்கும், நிக்கோலய் சச்தேவுக்கும் கடந்த 14 வருடங்களாக பழக்கமாம். இந்த வருடமே அவர்களின் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு வரலட்சுமி மும்பைக்கு சென்று வசித்தாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் அன்பு கோரிக்கை வைத்துள்ளனர்.

வரலட்சுமியும், அவரின் தங்கையும் சித்தி ராதிகாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ராதிகா வீட்டு விசேஷத்தில் அக்காவும், தங்கையும் தவறாமல் பங்கேற்பார்கள். வரலட்சுமியும், தங்கை பூஜாவும் ரயன் மிதுனை தங்களுடன் பிறந்த சகோதரியாக பார்க்கிறார்கள். ரயன் மிதுனும் வரலட்சுமி, பூஜா மீது அதிகம் அன்பு வைத்திருக்கிறார். தம்பி ராகுல் என்றால் ரயனுக்கும், வரலட்சுமிக்கும், பூஜாவுக்கும் தங்களின் உயிர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கேரளாவில் சம்பவம் செய்ய உருவான தமிழ் படம் ! சந்தோஷத்தில் கேரளா மற்றும் தமிழ் ரசிகர்கள்..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here