அந்தகன் ஃபர்ஸ்ட் சிங்கிளை விஜய் வெளியிட்டர் .. குஷியில் நடிகர் பிரசாந்த்

0
139

சென்னை: பிரசாந்த 90களில் உச்ச நட்சத்திரமாகவலம் வந்து கொண்டு இருந்தவர். இப்போது டாப் லெவலில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் இவர்களை விட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பெண் ரசிகைகளை தன் பக்கம் கவர்ந்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் என முன்னணி டைரக்டர்களோடும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவிலிருந்து விலகி போன அவர் அந்தகன் படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை விஜய் இன்று வெளியிட்டார்.

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே மெகா ஹிட்டானது. இவருக்கு அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; இவர் நடித்த முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. அதனை சரியாக பயன்படுத்தியதால் அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றி படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்காக ரசிகர் மன்றங்கள் அமைய தொடங்கின.

திருடா திருடா: அதனையடுத்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து வெற்றி கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா என்னும் படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த பிரஷாந்த் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித் இவர்களை விடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு சூழ்நிலையும், நேரமும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இவர்கள் இருவரின் ஒரு இடத்தை பிரஷாந்த் தான் அலங்கரித்திருப்பார்.

சறுக்கல்: இப்படி உச்சத்தில் போய் கொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் உண்டாகின. அதற்கு முக்கிய காரணம் அவருக்கும் அவரது மனைவிக்கும் நடந்த பிரச்னைதான் என சொல்லப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தி வந்ததால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்சனை மட்டுமில்லாமல், தந்தையின் தலையீடு பிரசாந்த்தின் வாழ்க்கையில் அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் சென்றுவிட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு.

ரீ என்ட்ரி: பல ஆண்டுகள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தில் நடிக்க தொடங்கினார். அந்தப் படம் ஹிந்தி படமான அந்தாதூன் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் பிரசாந்த்துடன் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நடிகரும் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்குகிறார். படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டாலும் படம் வெளியாகமாலேயே இருந்தது. சூழல் இப்படி இருக்க ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தகன் வெளி யாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அந்தப் பாடலை விஜய் மற்றும் பிரபுதேவா சேர்ந்து வெளியிட்டார்கள். இந்தப் பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பாடியிருக்கிறார்கள். மேலும் லிரிக்கல் காணொளியில் பிரசாந்த்தின் டான்ஸ் பட்டையை கிளப்புவதாக பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் மட்டுமில்லாமல் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களுக்கு என்று அந்தகன் படத்தின் திரையிடலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here