What causes heat stroke in summer : வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால், பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில், அது ஏன் ஏற்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

உலக வெப்பமயமாதலால் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே இருக்கிறது. முந்தைய வருடங்களில் ஏப்ரல், மே மாதங்களில் எந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்ததோ, அதே அளவுக்கு இந்த வருடம் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே இருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். இப்படியான அதீத வெயிலின் தாக்கத்தால், ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வெப்பவாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் ஒரு அவசர மருத்துவ நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக, உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் கூடுதலாகும் போது ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு உண்டாகிறது. எனவே, மனிதனின் உடலானது சாதாரண வெப்ப நிலையை தானாகவே கையாளும். ஆனால், ஒருவர் அதீத வெயிலில் இருக்கும்போது, அந்த வெப்பத்தை உடல் கையாள முடியாத நிலைக்கு போய்விடும். அப்போதுதான், ஹீட் ஸ்ட்ரோக் உண்டாகிறது. அத்துடன், காற்று இல்லாமல் சூடான பகுதியில் இருக்கும்போது கூட ஹீட் ஸ்ட்ரோக் உண்டாகும். அப்போது மயக்கம், பக்கவாதம் ஆகியவற்றோடு, உயிருக்கே ஆபத்து கூட உண்டாகும்.

குறிப்பாக, வயதானவர்கள் அதிகமாக ஹீட் ஸ்ரோக்கால் பாதிக்கப்படநேரிடும். ஏனெனில், மூப்பின் காரணமாக, அவர்கள் பல்வேறு மருந்துகளை சாப்பிட்டு வருவார்கள். இதனால், அவர்களுக்கு வெப்பம் உடலில் இருந்து வெளியேறும் அளவில் வியர்வை சுரக்காது. எனவே, அவர்களுக்கு உடல் சூடு கூடுதலாகி, ஹீட் ஸ்ட்ரோக்உண்டாகும். எனவே, வயதானவர்களும், மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுபவர்கள், மன நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் வெயிலில் சுற்றுவதையோ, வெயிலில் வேலை செய்வதையோ தவிர்க்க வேண்டும்.
அத்துடன், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், வெப்பவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது மேலும் அடிக்கடி தண்ணீர் குடிப்பது என உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here