நமக்கு அதுல எவ்வளவு வலிகளையும், அவமானங்களையும், வேதனைகளையும் சந்திச்சிருப்பார் அப்படின்னு நினைக்கத் தோணும். ஆனா அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னாடியே சிறு வயதிலேயே பெரிய அவமானத்தை சந்திச்சிருக்கார். அது என்னவென்று பார்ப்போம்.
சினிமாவில் டைரக்டர் ஆக ஆவதற்கு படிப்பு தேவையான்னு யூடியூப் சேனல் ஒன்றில் அவரிடம் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. அந்த கேள்விக்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
படிப்பு தொழில் கல்வி என்பது வேற. நாம இயற்கையா பார்த்து தெரிஞ்சி கொள்ளும் விஷயங்கள் வேற. எனக்கு ஐந்து வயசு. அண்ணனுக்கு ஆறு வயசு. மதியம் இரண்டரை மணி இருக்கும். அக்கா சாப்பிடுவதற்கு கூப்பிடுறாங்க.2 பேரும் அக்கா வீட்டுக்குப் பசியோட ஓடறோம்.

அங்க போய் உட்கார்ந்ததும் நல்லா இலை போட்டு வச்சிருக்காங்க. உட்கார்ந்த உடனே 2 பேரும் எழுந்திருங்கன்னு எங்க அக்கா சொல்றாங்க. நீங்க 2 பேரும் அப்படி போய் உட்காருங்க என்று சொல்றாங்க. அங்க போய் பார்த்தா பிளேட். நாய்க்கு சாப்பாடு வைப்பது மாதிரி.
ஏன்னா எங்க பெரியம்மா பசங்க அனைவரும் வசதியானவங்க. அவங்களுக்காக இது. இந்த பக்கம் இப்படி கொடுக்க முடியாது. அனாதைப் பசங்களுக்குக் கொடுப்பது போல பிளேட் போட்டு வச்சிருந்தாங்க. எங்களுக்கு என்னன்னா அந்த நேரத்துல இங்க உட்காருதுக்கு அங்க உட்காருவோம் என்று இருந்துட்டோம்.இது நடந்து முடிஞ்சிடுச்சு.
கடைசில என்னன்னா அந்த வீட்டுலயே பொண்ணு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகுது. எங்க அண்ணன் போய் அங்க கல்யாணம் செஞ்சிக்கிறாரு. இப்ப நான் அங்க அத்தை வீட்டில் காபி கடை வச்சிருக்காங்க. அப்படி இருந்தும் காபி குடிக்கக்கூடாது என்பதுல கவனமாக இருக்கேன். எங்க அண்ணனும் நானும் தான் அங்க சாப்பிடப் போனோம். இப்ப அண்ணன் அந்த வீட்டுலயே பொண்ணு எடுத்துட்டாரு. இப்போ அங்க போக வேண்டிய சூழ்நிலை.
2 பேரும் தான் ஓடி வர்றோம். 2 பேரும் தான் உட்காருறோம். 2 பேரையும் தான் எழுந்திருக்கச் சொன்னாங்க. எனக்கு உரைச்சது. எங்க அண்ணனுக்கு உரைக்கல. அதற்கு உள்ளே அவமானம் இருந்ததுங்கறதை நான் ஃபீல் பண்ணினேன். எங்க அண்ணன் என்ன இங்க உட்கார்ந்து சாப்பிடுவத அங்க உட்கார்ந்து சாப்பிடுறோம். ‘இவ்வளவு தான… இதுல ஒண்ணும் பெரிய இது இல்ல’என்று சொன்னாரு. அப்படி சாதாரணமா எடுத்துக்கறவங்களும் இருக்காங்க. அதே போல பிராக்டிகலா பார்த்து இதுக்குள்ளாற ஒரு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சவன் இயக்குனர் ஆகிடுறான். சும்மா படிச்சதனால மட்டும் இயக்குனர் ஆக முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டைரக்டர் ஆர்.சுந்தரராஜன் பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோவில் கிழக்காலே மற்றும் ராஜாதி ராஜா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here