Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

பொன்னியன் செல்வன் உருவாக ராஜமவுலி தான் காரணம்… ஓபனாக பேசிய மணிரத்தினம்!

இயக்குனர் ராஜமவுலி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிரத்தினம் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து…

இயக்குனர் ராஜமவுலி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிரத்தினம் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து மிகப்பெரிய இயக்குனராக திகழ்பவர் மணிரத்தினம். அவர் தனது இயக்கத்தில் நாயகன், ரோஜா, தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால், ஓகே கண்மணி போன்ற பல வித்தியாசமான படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவரது இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக “பொன்னியன் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

கல்கி எழுதிய தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய காவியமான பொன்னியின் செல்வன் நூலை திரைப்படமாக எடுக்க 1990 களிலிருந்து இயக்குனர் மணிரத்தினம் முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அவரது கனவு கடந்த 2022-23 ஆண்டுகளில்தான் நிஜமானது. “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என தனித்தனியாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தது.

Advertisements

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உரையாடிய இயக்குனர் மணிரத்தினம் தனது மிகப்பெரிய கனவான “பொன்னியின் செல்வன்” படமாக இயக்குனர் ராஜமவுலி தான் காரணம் என மனம் திறந்து பேசியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதில் அவர் “பாகுபலி” திரைப்படம் இல்லை என்றால் “பொன்னியின் செல்வன்” என்ற திரைப்படம் ஒருபோதும் உருவாகி இருக்காது என்றும் ராஜமவுலி அப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துக் காட்டியதுதான் தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் பெரிய வரலாற்று கதை பெரிய கதாபாத்திரங்கள் பிரம்மாண்டமான காட்சிகள் என இவையெல்லாம் இன்றைய பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் பாகுபலி நிரூபித்து தனக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், நான் பொன்னியின் செல்வன் படமாக்க முயன்ற காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் பலரும் பயந்து விலகி விட்டார்கள் என்றும் அத்தனை பெரிய கதை, இத்தனை கதாபாத்திரங்கள், பல இடங்கள் என அத்தனையும் அமைத்து உருவாக்க இன்றைய காலகட்டத்தில் சாத்தியமாகுமா என்று யாரும் நம்பவில்லை என்றும் ஆனால் ராஜமவுளியின் பாகுபலி வந்த பிறகு அந்த நம்பிக்கை அனைவரிடமும் உண்டானது என்றும் கூறியுள்ளார். மேலும் பாகுபலிக்கு பிறகு தான் எனக்கு பொன்னியன் செல்வன் உருவாக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதற்கு ராஜமவுலிக்கும் பாகுபலிக்கும் படத்திற்கும் தான் நான் நன்றி சொல்ல வேண்டி இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதனை ராஜமவுலி இடமும் தான் கூறியிருப்பதாகவும் அதனைக் கேட்டு அவர் சிரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு மற்றொரு இயக்குனரை மனதார பாராட்டி தனது நன்றியை வெளிப்படையாக கூறிய இயக்குனர் மணிரத்தினத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here