Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஆக்‌ஷன் த்ரில்லரா அல்லது ஆளும் கட்சியின் பிரச்சாரமா? ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ – திரை விமர்சனம்!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள லியாரி பகுதியின் நிழல் உலகக் கூட்டத்திற்குள் ஊடுருவி, அங்கு அதிகார உச்சத்தை அடையும் ஒரு இந்திய உளவாளியின் கதையை விறுவிறுப்பாகச் சொன்ன…

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள லியாரி பகுதியின் நிழல் உலகக் கூட்டத்திற்குள் ஊடுருவி, அங்கு அதிகார உச்சத்தை அடையும் ஒரு இந்திய உளவாளியின் கதையை விறுவிறுப்பாகச் சொன்ன படம் ‘துரந்தர்’ (முதல் பாகம்). தற்போது லியாரியின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அந்த உளவாளி எப்படிப் பழிதீர்க்கிறான் என்பதை விவரிக்கிறது இந்த இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’.

இயக்குநர் ஆதித்யா தர் முந்தைய பாகத்தைப் போலவே இதையும் கேங்ஸ்டர் மற்றும் ஸ்பை (Spy) த்ரில்லர் கலவையாகக் கொடுத்துள்ளார்.

கதைக்களம் மற்றும் திரைக்கதை ஹம்சா அலி மசாரி என்ற பெயரில் லியாரிக்குள் ஊடுருவிய இந்திய உளவாளியான ஜஸ்கிரத் சிங் (ரன்வீர் சிங்), பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகத் தொடுக்கும் யுத்தமே படத்தின் மையக்கரு.

முதல் பாகத்தை விட இதில் ரத்தம், வன்முறை மற்றும் அரசியல் பிரசாரம் ஆகியவை இரட்டிப்பாகியுள்ளன. படத்தின் நீளமும் சுமார் 4 மணிநேரம் (முதல் பாகத்தை விட 20 நிமிடம் அதிகம்). ஆரம்பத்தில் ஜஸ்கிரத் சிங்கின் கடந்த காலப் பின்னணி மெதுவாகச் சொல்லப்பட்டு, பின்னர் அவர் லியாரியின் ராஜாவாக மாறும் காட்சிகள் எந்த அழுத்தமுமின்றி ‘பாஸ்ட் ஃபார்வர்டில்’ நகர்கின்றன.

படத்தில் பிளஸ் / மைனஸ் என்ன?

Advertisements
  • பிளஸ்: ஆக்‌ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. சில மாஸ் மொமெண்ட்களும், எதிர்பாராத ட்விஸ்ட்களும் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன.
  • மைனஸ்: முதல் பாகத்தில் அக்‌ஷய் கண்ணா நடித்த ‘ரஹ்மான்’ கதாபாத்திரத்திற்கு இருந்த ஆழம், இதில் வரும் முக்கிய வில்லனான மேஜர் இக்பாலுக்கு இல்லை. ஒற்றைத்தன்மையுடைய அந்த வில்லன் கதாபாத்திரம் படத்திற்குப் பெரிய மைனஸ். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும், படத்தின் நீளம் பெரும் அயர்ச்சியைத் தருகிறது.

அரசியல் பிரச்சாரமா? படத்தை வெறும் ஆக்‌ஷன் சினிமாவாக மட்டும் பார்க்க முடியவில்லை. உளவுப் படங்களில் எதிரி நாட்டைத் தீமையாகச் சித்தரிப்பது ஹாலிவுட் முதல் இந்திய சினிமா வரை வழக்கமான ஒன்றுதான். ஆனால், இது தற்போதைய ஆளும் மத்திய அரசின் சாதனைகளைச் சொல்லும் ஒரு ‘ஊதுகுழலாக’ மாறிவிட்டதுதான் பெரும் நெருடல்.

முந்தைய பாகத்தில் மாதவன் கதாபாத்திரத்தின் மூலம் பூடகமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள், இதில் அப்பட்டமாகப் பேசப்படுகின்றன. பணமதிப்பிழப்பு (Demonetisation) தொடங்கி ராமர் கோயில் தீர்ப்பு வரை, ஆளும் அரசு எதையெல்லாம் தனது சாதனை எனத் தம்பட்டம் அடிக்க நினைக்கிறதோ, அதையெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ ஆகக் கதையில் முடிச்சுப் போட்டு நியாயப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் பல இடங்களில் வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ்களுக்குத் திரைவடிவம் கொடுத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

வரலாற்று உண்மைகளுடன் தங்களுக்குத் தேவையான புனைவுகளைக் கலந்து, எது உண்மை, எது பொய் என்ற தெளிவில்லாமல் பார்வையாளர்களை நம்பவைக்கும் சித்து விளையாட்டைப் படம் முழுவதும் செய்திருக்கிறார்கள்.

தீர்ப்பு: ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ – தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பான ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், அளவுக்கதிகமான அரசியல் பிரச்சாரத்தால் ஒரு முழுமையான திரை அனுபவத்தைத் தரத் தவறியிருக்கிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here