பிச்சைக்காரன்’ என எப்போதுமே எதார்த்தமான எமோஷனல் கதைகளை இயக்கும் இயக்குநர் சசி, இந்த முறை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘நூறு சாமி’
. பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் இப்படம் வரும் ஜூன் 19-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீசாகிறது.
டிவி ரியாலிட்டி ஷோ டூ சினிமா: கதை பிறந்தது எப்படி?
விழாவின் இறுதியில் பேசிய இயக்குநர் சசி, படத்தின் கதைக் கரு உருவான விதம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். “தொலைக்காட்சியில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவில் அம்மாவும் மகனும் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்திலிருந்துதான் இந்தக் கதையைப் பிடித்தேன். தாயைத் தெய்வமாகப் பார்த்த கதையே ‘பிச்சைக்காரன்’. ஆனால், ஒரு மகன் தன் தாயை ஒரு ‘மனுஷியாக’ பார்த்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த ‘நூறு சாமி’. படம் பார்த்த பிறகு எல்லோரும் தங்கள் அம்மாவை ஒரு சாதாரண மனுஷியாகப் பார்க்கத் தொடங்குவார்கள்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், படத்தில் விஜய் ஆண்டனி கடைசி 40 நிமிடங்கள்தான் வருவார் என்ற ரகசியத்தையும் உடைத்தார். “ஹீரோ லேட்டாக வந்தாலும் இந்த படம் நிச்சயம் பெரிய ஹிட் அடிக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் சசி.
என் வாழ்வின் 3-வது திருப்புமுனை! – விஜய் ஆண்டனி
நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி பேசுகையில் , “என் சினிமா வாழ்க்கையில் மூன்று பெரிய திருப்புமுனைகள். ஒன்று ‘டிஷ்யூம்’ படத்தில் சசி சார் எனக்கு இசையமைக்கத் தந்த வாய்ப்பு. இரண்டாவது ‘பிச்சைக்காரன்’. தற்போது மூன்றாவது திருப்புமுனையாக இந்த படத்தில் என்னை ஒரு ‘லவ்வர் பாய்’ ஆக மாற்றியுள்ளார். இது பெண்களுக்கும், குடும்பங்களுக்கும் மிக மிக அவசியமான ஒரு படம். உங்களை ஏமாற்றாது” என்றார்

டாப் இயக்குநர்கள் பாராட்டு மழை!
- இயக்குநர் வெற்றிமாறன்: “இயக்குநர்கள் படம் எடுத்தால் அந்தப் படம் அவர்கள் பெயரோடு சேரும். ஆனால் சசி சாருக்கு மட்டும்தான் படங்களின் பெயரே அடையாளமாக மாறும். இத்தனை வருட அனுபவம் இருந்தாலும், ஒரு புதுமுக இயக்குநர் போன்ற துடிப்புடன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு இந்த ‘நூறு சாமி’யைச் செதுக்கியுள்ளார். விக்ரமன் மற்றும் அனைத்து நடிகர்களும் அற்புதம்” என்று வாழ்த்தினார்.
- இயக்குநர் பா.ரஞ்சித்: “நான் உதவி இயக்குநராகச் சுற்றிய காலத்தில் எனக்கு முதல் முதலில் நம்பிக்கை தந்து அமர வைத்துப் பேசியவர் சசி சார். இந்த ‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதில் வரும் ‘சீலிங் ஃபேன்’ காட்சியை என் வாழ்க்கையோடு உளவியல் ரீதியாக ஒப்பிட்டுப் பார்த்தேன். சமூகத்தில் இன்றும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான பெண் அரசியல் இதில் பேசப்பட்டுள்ளது” என்றார்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்: “இது என் சொந்த ஊரில் நடந்த ஒரு நிஜக் கதை. கிளைமாக்ஸ் 20 நிமிடங்களில் அவ்வளவு பதைபதைப்பு இருந்தது, ஆனால் யாரும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸை வைத்துள்ளார் சசி. படத்தில் நடித்த நடிகை சுவாசிகாவின் நடிப்பு பாலுமகேந்திரா பட ஷோபா போல அசாத்தியமாக உள்ளது. இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டியே இருக்கும். ‘தீனா’ படத்தை நான் கைவிட நினைத்தபோது எனக்குப் பக்கபலமாக நின்று தைரியம் கொடுத்தவரே சசிதான்” என பழைய நினைவுகளைப் பகிர்ந்தார்.
இயக்குநர் மிஷ்கின்: “நான் சினிமாவில் பார்த்த சில சாமிகளில் ஒரு சாமிதான் சசி. ஆண்களிடம் இருக்கும் ‘பெண்மைத் தன்மை’ யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள்தான் சிறந்த கலைஞர்கள். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானைப் போல சசி சாரிடமும் அந்தத் தாய்மை குணம் அதிகம். இந்தச் சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள், பாதிக்கப்பட்ட பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்த படம் அழுத்தமாகப் பேசுகிறது” என்றார்.
புதிய இசையமைப்பாளர் அறிமுகம்!
விஜய் ஆண்டனி மற்றும் சசி கூட்டணியில், ‘அம்மா அம்மா’ என்ற பாடலின் மூலம் ஈர்த்து, இந்த படத்தின் மூலம் புதிய இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாலாஜி ஸ்ரீராம். மேடையில் இவரை விஜய் ஆண்டனி உட்பட பல இசையமைப்பாளர்கள் இணைந்து வாழ்த்தி அறிமுகப்படுத்தினர்.
நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு:
- நடிப்பு: விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர்
- தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி (Vijay Antony Film Corporation) | வழங்குபவர்: மீரா விஜய் ஆண்டனி.
- ஒளிப்பதிவு: எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் | இசை: பாலாஜி ஸ்ரீராம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


