வி,ஜே மகேஸ்வரியின் மகன் அம்மா பற்றி பேசியதற்கு தரமான ரிப்ளை கொடுத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்யும் தொகுப்பாளர்களில் வி.ஜே மகேஸ்வரியும் ஒருவர்.
இவர் ஆரம்பகாலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்து வந்தார். பின்னர் காலங்கள் போக போக சின்னத்திரை, சினிமா படங்கள் என பிரபலமடைந்து விட்டார்.

தற்போது 36 வயதாகும் வி.ஜே மகேஸ்வரி கல்யாணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் ஆறில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இவர் கலந்து கொண்டார்.
டைட்டில் கிடைக்காவிட்டாலும் வீட்டில் நடந்த சில பிரச்சினைகளில் நுழைந்து கடும் விமர்சனத்தை பெற்றார்.
மகனுக்காக தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வி.ஜே மகேஸ்வரி தன்னுடைய மறுமணம் குறித்து பேசியிருக்கிறார்.
அதில், “ எனக்கும் நிறைய தேவைகள் இருக்கிறது. ஆனால் என்னை கல்யாணம் செய்து கொள்பவர் என் மகனுக்கு சிறந்த தகப்பனாக இருப்பரா? என்ற பயம் இருக்கிறது. என்னை திருமணம் செய்துக் கொள்வதாக 2 நபர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் எனக்குள்ளே ஒரு பயம் இருக்கிறது..” என கவலையாக பேசி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து வி.ஜே மகேஸ்வரி தனது மகனுடன் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டிக் கொடுத்து உள்ளார்.
அப்போது, வி.ஜே மகேஸ்வரியை பற்றி பல கேள்விகள் மகனிடம் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த வி.ஜே மகேஸ்வரியின் மகன் கேசவ் “ அம்மா குறித்து தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த போது நான் பார்த்து விட்டு மிகவும் வறுத்தமடைந்தேன்.
பின்னர் நாளடைவில் நான் கமெண்ட்டுகளை பார்ப்பதை விட்டு விட்டேன். எனது பாட்டி ஒரு நாள் பார்த்து விட்டு சொன்ன போதும் அவற்றை இனிமேல் பார்க்க வேண்டாம் என சொன்னேன்.” என கூறியுள்ளார்.
இவருடைய இந்த பதில் வி.ஜே மகேஸ்வரியை விமர்சனம் செய்பவர்களுக்கு தரமான பதிலடியாக மாறியுள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here