பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலின் முதல் சீசனிற்கு பெரும்வெற்றி கிடைத்தது. முதல் சீசன் முடிந்த கையோடு இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்ட இது அப்பா-மகன்களின் பாச பிணைப்பை பற்றிய கதையாக அமைந்திருக்கிறது.

இதில் முதல் சீசனில் நடித்தவர்களும்இருக்கிறார்கள், சமீபத்தில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த வசந்த் வசி வெளியேறினார். அவருக்கு பதிலாக வெங்கட் இணைந்துள்ளார்.
நிரோஷா பேச்சு
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பருவத்தில் பாசம் நிறைந்த அம்மாவாக கோமதி என்னும் கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார்.
பல சீரியல்களில் இதுவரை நான் நடித்து உள்ளேன், அந்த சீரியல்களில் கிடைக்காத அனுபவம் எனக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ்-யில் கிடைத்துள்ளது என ஒரு பேட்டியில் நிரோஷா பேசியுள்ளார். கோமதியாக என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஒருநாள் ரோட்டில் நடந்து சென்ற போது ஒரு பெண் என்னிடம் வந்து, கோமதி இனிமேல் இப்படியே இருந்துகோமா, மருமக கிட்ட இருக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிடாதே. சமையல் அறையை எந்த காரணத்தை கொண்டும் உன் மருமக தங்க மயிலுக்கிட்ட கொடுத்துவிடாதே என்று சொன்னார். எனக்கு சிரிப்பு வந்தது, என்னடா நம்ம கதாபாத்திரத்தை இவ்வளவு ஆழமா ரசிக்கிறாங்க என்று தான் நினைத்தேன்.
எனது அம்மாவும் கோமதி கேரக்டர் பார்த்து நீயா இது போல எல்லாம் நடிக்கிற என கேட்டதாக நிரோஷா தெறிவித்திருக்கிறார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here